போதைப்பொருள் எதிர்ப்பு தினம் - திவான்சபுதூரில் வாணவராயர் வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

திவான்சபுதூரில், வாணவராயர் வேளாண் கல்லூரியில் பயிலும் இரண்டாம் ஆண்டு படிக்கும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், தமிழ்நாடு காவல்துறை, ஆனைமலை பிரிவுடன் இணைந்து போதைப்பொருள் பற்றி விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.


கோவை: ஒவ்வொரு வருடமும் ஜூன் 26 அன்று, “போதைப்பொருள் தவறான பயன்பாடு மற்றும் சட்டவிரோத வர்த்தக எதிர்ப்பு தினம்”, இளைஞர்களுக்கு போதைப்பொருள் பயன்பாட்டின் ஆபத்துகள் மற்றும் சமூகம், கலாச்சாரம், கல்வி மற்றும் குடும்ப நலத்தில் அதன் தாக்கத்தை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகிறது.



இந்த நாளை நினைவுகூர்ந்து, பொள்ளாச்சி வாணவராயர் வேளாண் கல்லூரியில் பயிலும் இரண்டாம் ஆண்டு நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் ஜூன் 26, 2024 அன்று, திவான்சபுதூரில் தமிழ் நாடு காவல்துறை, ஆனைமலை பிரிவுடன் இணைந்து "விழிப்புணர்வு பேரணி" ஒன்றை ஏற்பாடு செய்தனர்.



இந்த பேரணியை சிறப்பு துணை ஆய்வாளர் சமுத்திரபாண்டியன் தொடங்கி வைத்தார். நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் போதைப்பொருள் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர்.



இந்த நிகழ்வு, போதைப்பொருள் பயன்பாட்டின் தீமைகளை விளக்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், முனைவர் G. தாமோதரன், முனைவர் N. நவீனா, முனைவர் H. சங்கரராமன் மற்றும் துணை ஆய்வாளர் கென்னடி, காவல் ஆய்வாளர் முருகவேல் ஆகியோர் இந்த பேரணியை ஒருங்கிணைத்தனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...