போதைப்பொருள் எதிர்ப்பு தினம் - திவான்சபுதூரில் வாணவராயர் வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

திவான்சபுதூரில், வாணவராயர் வேளாண் கல்லூரியில் பயிலும் இரண்டாம் ஆண்டு படிக்கும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், தமிழ்நாடு காவல்துறை, ஆனைமலை பிரிவுடன் இணைந்து போதைப்பொருள் பற்றி விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.


கோவை: ஒவ்வொரு வருடமும் ஜூன் 26 அன்று, “போதைப்பொருள் தவறான பயன்பாடு மற்றும் சட்டவிரோத வர்த்தக எதிர்ப்பு தினம்”, இளைஞர்களுக்கு போதைப்பொருள் பயன்பாட்டின் ஆபத்துகள் மற்றும் சமூகம், கலாச்சாரம், கல்வி மற்றும் குடும்ப நலத்தில் அதன் தாக்கத்தை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகிறது.



இந்த நாளை நினைவுகூர்ந்து, பொள்ளாச்சி வாணவராயர் வேளாண் கல்லூரியில் பயிலும் இரண்டாம் ஆண்டு நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் ஜூன் 26, 2024 அன்று, திவான்சபுதூரில் தமிழ் நாடு காவல்துறை, ஆனைமலை பிரிவுடன் இணைந்து "விழிப்புணர்வு பேரணி" ஒன்றை ஏற்பாடு செய்தனர்.



இந்த பேரணியை சிறப்பு துணை ஆய்வாளர் சமுத்திரபாண்டியன் தொடங்கி வைத்தார். நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் போதைப்பொருள் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர்.



இந்த நிகழ்வு, போதைப்பொருள் பயன்பாட்டின் தீமைகளை விளக்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், முனைவர் G. தாமோதரன், முனைவர் N. நவீனா, முனைவர் H. சங்கரராமன் மற்றும் துணை ஆய்வாளர் கென்னடி, காவல் ஆய்வாளர் முருகவேல் ஆகியோர் இந்த பேரணியை ஒருங்கிணைத்தனர்.

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...