கோவையில் 197 ஊராட்சிகள் திறந்தவெளி கழிப்பறையற்ற ஊராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது என ஊரக வளர்ச்சி முகமை தகவல்

கோவை மாவட்டம் திறந்தவெளி மலம் கழித்தல் அற்ற மாவட்டமாக 2016-17 ஆம் ஆண்டு அறிவிக்க தேர்ந்தெடுக்கப்பட்டு  இவ்வாண்டின் குறியீடான 56615 கழிப்பறைகளில் இதுவரை 47344 வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. 



மொத்தமுள்ள 228 ஊராட்சிகளில் 197 ஊராட்சிகள் சுகாதார ஊக்குவிப்பாளர்கள் மற்றும குட்டி கமாண்டோ படையினரின் முழுமையான ஒத்துழைப்புடன் திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகளாக அறிவிக்கப்பட்ட 197 ஊராட்சிகளிலும் குட்டி கமாண்டோ படையினர் மூலமாக தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



மீதமுள்ள 31 ஊராட்சிகளில் தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. சுகாதார ஊக்குவிப்பாளர்கள், குட்டி கமாண்டோ படையினர் ஆகியோரின் தொடர்ச்சியான சுகாதார விழிப்பணர்வு நடவடிக்கைகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்க பிரதிநிதிகள் ஆகியோர் ஒத்துழைப்புடன் மீதமுள்ள பணிகள் நிறைவு செய்யப்பட்டு 14.4.2017 அன்று சிறப்பு கிராம சபா மூலம் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற ஊராட்சிகளாக அறிவிக்கப்பட உள்ளது.

அதனைத்தொடர்ந்து, கோவை மாவட்டம் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற மாவட்டமாக மாற்றப்பட உள்ளது.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...