உடுமலை, மடத்துக்குளத்தில் கனமழை - குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதி

உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதி கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இந்த நிலையில் இன்று காலை முதல் இப்பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் தற்போது இடைவிடாமல் கனமழை பெய்து வருகின்றது. இதனால் கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்ததால் பொதுமக்களும் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்.



பொதுமக்கள் கூறும் பொழுது, தற்பொழுது மடத்துக்குளம் பகுதியில் இடைவிடாமல் கன மழை பெய்து வருகின்றது. கோவை-திண்டுக்கல் தேசிய பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் மற்றும் விரிவு படுத்தாத நிலையில் தற்போது குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது. சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மடத்துக்குளம் பேரூராட்சி நிர்வாகத்திற்கும், நெடுஞ்சாலை துறைக்கும் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் புகார் தெரிவித்தனர்.

Newsletter

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...