கோவையில் மயக்க மருந்து கொடுத்து மூதாட்டியிடம் 20 பவுன் நகை திருடிய பெண் கைது

கோவையில் மயக்க மருந்து கொடுத்து 65 வயது மூதாட்டியிடம் இருந்து 20 பவுன் நகை திருடி விட்டு தப்பிய பெண்ணை போலீஸ் கைது செய்தனர். திருடிய நகையும் மீட்கப்பட்டுள்ளது.


கோவை: மதுரையைச் சேர்ந்தவர் நாகம்மாள் (வயது 65) திண்டுக்கல் மாவட்டம் கணக்கம்பட்டியில் உள்ள ஒரு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். அங்கு கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த வள்ளி (வயது 55) என்பவரும் வந்தார். 

அவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது .அங்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வரலாம் என்று நாகம்மாளை அழைத்தார். அவரும் வள்ளியுடன் மாசாணியம்மன் கோவிலுக்கு சென்றார். 

பின்னர் அவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு இரவு நேரம் ஆனதால் கோயில் வளாகத்தில் படுத்து தூங்கினர். அதற்கு முன்பாக நாகம்மாள் தான் அணிந்திருந்த 20 பவுன் நகைகளை வள்ளி கூறியதன் பேரில் கழட்டி ஒரு பையில் வைத்திருந்தார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது வள்ளியையும், நகை வைத்திருந்த பையையும் காணவில்லை.

பின்னர் இது குறித்து ஆனைமலை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்தனர். அவர்கள் பெங்களூரில் தங்கியிருந்த வள்ளியை நேற்று மே.23 கைது செய்தனர். பின் அவரிடம் இருந்து திருட்டு போன நகைகள் மீட்கப்பட்டுள்ளன. 

அவர் ஏற்கனவே ஆனைமலை தர்மராஜா காலனியில் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்து அதன் உரிமையாளர் வீட்டில் 7 பவுன் நகை திருடி உள்ளார் .அதோடு சென்னை, காஞ்சிபுரத்திலும் கைவரிசை காட்டியுள்ளார். மேலும் நாகம்மாளிடம் நகை திருடும் முன் அவருக்கு பழரசத்தில் மயக்க மருந்து கொடுத்து அவரை தூங்க வைத்து வைத்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...