கோவையைச் சேர்ந்த 7 வயது சிறுவன் சிலம்பம் சுற்றியபடி 15 கிலோமீட்டர் ஓடி உலக சாதனை

ஒற்றை சிலம்பத்தை 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு தொடர்ந்து ஓடியபடி ஒரு மணி நேரம் முப்பத்தாறு நிமிடங்களில், 11,520 தடவை சிலம்பம் சுற்றி மித்ரன் என்ற சிறுவன் உலக சாதனை படைத்துள்ளார். மித்ரனுக்கு உலக சாதனை புத்தகங்களின் கோவை மாவட்ட தலைவர் பிரகாஷ்ராஜ் கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.


கோவை: கோவை, குரும்பபாளையம் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன், பிரியா ஆகியோரின் மகன் மித்ரன். ஏழு வயதான சிறுவன் மித்ரன் தமிழக பாரம்பரிய கலைகளான சிலம்பம், அடிமுறை, வேல்கம்பு, வாள்வீச்சு போன்ற தமிழ் பாரம்பரிய கலைகளை சிறு வயது முதலே ஆர்வமாக கற்று வருகிறார்.



இந்நிலையில், சிறுவனின் ஆர்வத்தை கண்ட அவரது பயிற்சியாளர் பிரகாஷ் ராஜ் சிலம்பம் சுற்றுவதில் பிரத்யேக பயிற்சி வழங்கியுள்ளார். அதன்படி இன்று (மே.7) ஒற்றை சிலம்பத்தை 15 கிலோ மீட்டர் தொடர்ந்து ஓடிய படி ஒரு மணி நேரம் முப்பத்தாறு நிமிடங்களில், 11,520 தடவை சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்துள்ளார்.



குரும்பபாளையம் ஆதித்யா குளோபல் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த சாதனை, இந்தியா உலக சாதனை புத்தகம், யூரோப்பியன் உலக சாதனை புத்தகம் மற்றும் அமெரிக்கன் உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தது.பின்னர் சாதனை மாணவன் மித்ரனுக்கு உலக சாதனை புத்தகங்களின் கோவை மாவட்ட தலைவர் பிரகாஷ்ராஜ் கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...