பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உள்பிரகாரத்தில் கூலிங் பெயிண்ட் - பக்தர்கள் மகிழ்ச்சி

பேரூர் கோவிலின் பிரகாரத்தை சுற்றி வரும் தரையில் கூலிங் பெயிண்ட் பூசப்பட்டுள்ளது. நீல நிறத்தில் காணப்படும் இந்த பெயிண்ட் பூசப்பட்ட பகுதியின் வழியாக நடந்து செல்லும் போது பாதங்கள் சுடுவதில்லை என பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


கோவை: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு உள்ளூரைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளியூர், வெளி மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.

புகழ்பெற்ற இந்த கோவிலின் உள்பிரகாரம் கருங்கற்களால் ஆனது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கருங்கற்களால் ஆன பிரகாரத்தை சுற்றி வர முடியாமல் பக்தர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். மேலும் பிரகாரத்தை சுற்றி வரும் பக்தர்கள் பலர் கால்கள் சுடுவதால் பிரகாரத்தை சுற்றி வருவதை தவிர்த்து வந்தனர்.



இந்த நிலையில் அண்மையில் தனியார் உபயதாரர் மூலம் பேரூர் கோவிலின் பிரகாரத்தை சுற்றி வரும் தரையில் கூலிங் பெயிண்ட் பூசப்பட்டுள்ளது. நீல நிறத்தில் காணப்படும் இந்த பெயிண்ட் பூசப்பட்ட பகுதியின் வழியாக பக்தர்கள் நடந்து செல்லும் போது அவர்களின் பாதங்கள் சுடுவதில்லை. இதனால் பக்தர்கள் மன நிம்மதியுடன் பிரகாரத்தை தற்போது வலம் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர் என கோவிலில் பணிபுரிபவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...