பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உள்பிரகாரத்தில் கூலிங் பெயிண்ட் - பக்தர்கள் மகிழ்ச்சி

பேரூர் கோவிலின் பிரகாரத்தை சுற்றி வரும் தரையில் கூலிங் பெயிண்ட் பூசப்பட்டுள்ளது. நீல நிறத்தில் காணப்படும் இந்த பெயிண்ட் பூசப்பட்ட பகுதியின் வழியாக நடந்து செல்லும் போது பாதங்கள் சுடுவதில்லை என பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


கோவை: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு உள்ளூரைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளியூர், வெளி மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.

புகழ்பெற்ற இந்த கோவிலின் உள்பிரகாரம் கருங்கற்களால் ஆனது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கருங்கற்களால் ஆன பிரகாரத்தை சுற்றி வர முடியாமல் பக்தர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். மேலும் பிரகாரத்தை சுற்றி வரும் பக்தர்கள் பலர் கால்கள் சுடுவதால் பிரகாரத்தை சுற்றி வருவதை தவிர்த்து வந்தனர்.



இந்த நிலையில் அண்மையில் தனியார் உபயதாரர் மூலம் பேரூர் கோவிலின் பிரகாரத்தை சுற்றி வரும் தரையில் கூலிங் பெயிண்ட் பூசப்பட்டுள்ளது. நீல நிறத்தில் காணப்படும் இந்த பெயிண்ட் பூசப்பட்ட பகுதியின் வழியாக பக்தர்கள் நடந்து செல்லும் போது அவர்களின் பாதங்கள் சுடுவதில்லை. இதனால் பக்தர்கள் மன நிம்மதியுடன் பிரகாரத்தை தற்போது வலம் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர் என கோவிலில் பணிபுரிபவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...