ஓய்வூதியர்களுக்கு இணையதளம் மூலம் மின்னணு உயிர்வாழ் சான்று

தமிழ்நாடு அரசு கருவூலங்கள் மூலமாக ஓய்வூதியம் பெறும் அரசு ஓய்வூதியர்கள் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 1 முதல் ஜுன் 30க்குள் கருவூலத்திற்கு நேரில் ஆஜராக வேண்டும் அல்லது தங்களது உயிர்வாழ் சான்றினை சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வருடம் முதல் கூடுதல் வசதியாக ஜீவன் பிரமான் என்ற மத்திய அரசின் உயிர்வாழ் சான்றினை பெற்று கருவூல இணையதளத்தில் பதிவுசெய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அரசு இ-சேவை மையங்கள் மூலமாகவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 

ஜீவன் பிரமான் மூலம் மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் கருவூலத்தில் அளிப்பதற்கான நடைமுறைகள்:-

1. தமிழ்நாடு அரசு கேபில் டிவி நிறுவனத்தின் இ-சேவை மையத்தில் தங்களது ஆதார் எண்ணை தெரிவித்து, கைவிரல் ரேகையை பதிவு செய்து, ஓய்வூதியம் தொடர்பான தகவல்களை தெரிவித்தால் அவர்களுக்கு மின்னணு வாழ்வு சான்றிதழ் அச்சிட்டு வழங்கப்படும். இதற்கு சேவை கட்டணமாக ரூ.10 செலுத்த வேண்டும்.

2. ஆதார் எண், ஓய்வூதிய கொடுவை எண், ஓய்வூதியம் அனுப்பும் அலுவலக விவரம் உள்ளிட்டவற்றை அரசு இ-சேவை மையத்தில் அளிக்க வேண்டும்.

ஜீவன் பிரமான் இணையதளம் மூலமாக அனுப்பப்படுகின்ற உயிர்வாழ் சான்றுகள் உரிய கருவூலத்தில் அல்லது ஓய்வூதிய அலுவலகத்தில் சரிபார்த்து பதிவுகள் மேற்கொள்ளப்படும்.

ஜீவன் பிரமான் இணையதளத்தில் உயிர்வாழ் சான்றினை, ஓய்வூதியர்களுக்கு உரிய வசதிகள் இருப்பின் தனிப்பட்ட முறையிலும், மின்னணு உயிர்வாழ் சான்றினை ஜீவன் பிரமான மூலமாக அளிக்கலாம். அவை கருவூலத்தில் சரிபார்க்கப்பட்டு உரிய பதிவுகள் மேற்கொள்ளப்படும் என கோவை மாவட்ட கருவூல அலுவலர் தெரிவித்துள்ளார்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...