கோவை உற்பத்தித்திறன் குழு சார்பில் பாதுகாப்பு மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து கோவையில் இன்று கருத்தரங்கம்

பாதுகாப்பு மற்றும் உடல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வோடும் விதிகளின்படியும் அமலாக்கவேண்டியவைகள் குறித்து நிறுவனங்களுக்கு மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவை உற்பத்தித்திறன் குழு, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநனரத்தின் வழிகாட்டுதலின்படி இன்று ஒரு நாள் கருத்தரங்கு கோவையில் நடைபெற்றது.



முதன்முறையாக நடைபெறும் இந்த கருத்தரங்கை கே.பி.ஆர் குழு தலைவர் கே.பி.ராமசாமி துவக்கி வைத்தார். இநநிகழ்ச்சியின் தொடக்கத்தில் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியின் முதன்மை நிர்வாக அதிகாரி ஏ.எம்.நடராஜன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில், தொழில்சாலைகள் பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை கூடுதல் இயக்குநர் கே.அருள் கலந்துகொண்டு உரையாற்றினார். மேலும், ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் (மனிதவள மேம்பாட்டுத்துறை) கவிதாசன் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை குறித்து எடுத்துரைத்தார்.

இதனைத்தொடர்ந்து, தி க்ரோத் அகாடமியின் தலைமை வழிகாட்டியான ஆர்.துரைசாமி 'சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு செயல்பாடுகளுக்கான ஊக்குவிப்பு' பற்றியும், ஐடிசி நிறுவனத்தின் முதுநிலை மேலாளர் ஆர்.சண்முகநாதன் 'சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பற்றிய சட்டமுறைகள்' என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினர்.

தொடர்ந்து, 'அவசரகால நடவடிக்கைகள்' என்ற தலைப்பில் வந்தே மாதரம் மாதவன் மற்றும் தொழிற்சாலைகள் பாதுகாப்பு மற்றும் சுகாதார துறையின் ரமேஷ் ராஜா பிரபு ஆகியோர் உரையாற்றினர்.

மேலும், இக்கருத்தரங்கின் ஒரு பகுதியாக ''விபத்துக்கு பெரிதும் காரணம்'' என்னும் தலைப்பில் 'அறியாமையே', 'அலட்சியமே' என்னும் இருவேறு கருத்தில் பட்டிமன்றம் நடைபெறவுள்ளது.

இதில், அறியாமையே என்னும் கருத்தில் கோவை பொன்.அண்ணாதுரை மற்றும் வைகறை பூங்கொடி ஆகியோரும், அலட்சியமே என்னும் கருத்தில் கோவை ஃப்லோ லின்க் சிஸ்டம்ஸ் மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரி குருசெல்வராஜ் மற்றும் இன்டகரா ஆட்டோமேஷன் தலைமை மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரி ஏ.பொன்மலர் ஆகியோரும் பேசவுள்ளனர். 

இப்பட்டிமன்றத்திற்கு கோவை உற்பத்தித் திறன் குழு தலைவர் கவிதாசன் நடுவராக செயல்படவுள்ளார்.

Newsletter

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...