வாணவராயர் வேளாண்மை கல்லூரியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

வேளாண்மை பயிலும் மாணவர்கள் தொழில் திறமையை வளர்த்துக்கொண்டு, புது வகை வேளாண் சார்ந்த தொழில்களில் ஈடுபட வேண்டும் என்று குடியரசு தின விழா உரையில், வாணவராயர் வேளாண்மை கல்லூரியின் முதல்வர் கு.பிரபாகர் கேட்டு கொண்டார்.


கோவை: பொள்ளாச்சி ஆனைமலை வட்டம் வாணவராயர் வேளாண்மை கல்லூரியில் 75 வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடபட்டது. விழாவில் கல்லூரி தேசிய மாணவர் படை பொறுப்பாளர் விஜயகுமார் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் முனைவர் கு.பிரபாகர் தேசிய கொடியை ஏற்றி வைத்து தேசிய மாணவர் படை மற்றும் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.

அவர் தனது குடியரசு தின விழா உரையில், வேளாண்மை பயிலும் மாணவர்கள் தொழில் திறமையை வளர்த்துக்கொண்டு, புது வகை வேளாண் சார்ந்த தொழில்களில் ஈடுபட கேட்டு கொண்டார்.



தேசிய மாணவர் படையின் ராணுவம் சார்ந்த நிகழ்ச்சி, மாணவர்களின் பிரமிட் அனைவரையும் கவர்ந்தது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் மாவட்ட அளவில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கி கல்லூரி முதல்வர் முனைவர் கு.பிரபாகர் மற்றும் இயக்குனர் முனைவர் கெம்புசெட்டி கவரவித்தனர். இந்த நிகழ்ச்சிகளை மாணவ மன்ற அலுவலர் ரவிக்குமார் ஒருங்கிணைப்பில் மாணவ மன்ற பொறுப்பாளர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...