வாணவராயர் வேளாண்மை கல்லூரியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

வேளாண்மை பயிலும் மாணவர்கள் தொழில் திறமையை வளர்த்துக்கொண்டு, புது வகை வேளாண் சார்ந்த தொழில்களில் ஈடுபட வேண்டும் என்று குடியரசு தின விழா உரையில், வாணவராயர் வேளாண்மை கல்லூரியின் முதல்வர் கு.பிரபாகர் கேட்டு கொண்டார்.


கோவை: பொள்ளாச்சி ஆனைமலை வட்டம் வாணவராயர் வேளாண்மை கல்லூரியில் 75 வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடபட்டது. விழாவில் கல்லூரி தேசிய மாணவர் படை பொறுப்பாளர் விஜயகுமார் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் முனைவர் கு.பிரபாகர் தேசிய கொடியை ஏற்றி வைத்து தேசிய மாணவர் படை மற்றும் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.

அவர் தனது குடியரசு தின விழா உரையில், வேளாண்மை பயிலும் மாணவர்கள் தொழில் திறமையை வளர்த்துக்கொண்டு, புது வகை வேளாண் சார்ந்த தொழில்களில் ஈடுபட கேட்டு கொண்டார்.



தேசிய மாணவர் படையின் ராணுவம் சார்ந்த நிகழ்ச்சி, மாணவர்களின் பிரமிட் அனைவரையும் கவர்ந்தது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் மாவட்ட அளவில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கி கல்லூரி முதல்வர் முனைவர் கு.பிரபாகர் மற்றும் இயக்குனர் முனைவர் கெம்புசெட்டி கவரவித்தனர். இந்த நிகழ்ச்சிகளை மாணவ மன்ற அலுவலர் ரவிக்குமார் ஒருங்கிணைப்பில் மாணவ மன்ற பொறுப்பாளர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...