வால்பாறை அரசு பேருந்து விபத்து: 30 பேர் காயம்

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


Coimbatore: 

வால்பாறை அரசு பேருந்து விபத்து: 30 பேர் காயம்

கோவை, ஜனவரி 17, 2024: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அரசு பேருந்து இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.





வால்பாறை பேருந்து நிலையத்தில் இருந்து வெல்லமலை எஸ்டேட் பகுதிக்கு செல்வகுமார் என்பவர் இயக்கி வந்த பேருந்து, வெல்லமலை எஸ்டேட்டில் இருந்து வால்பாறை நோக்கி ராமகிருஷ்ணன் என்பவர் இயக்கி வந்த பேருந்து ஆகிய இரண்டு பேருந்துகளும் மாலை 5.50 மணியளவில் பெட்ரோல் பங்க் பகுதியில் நேருக்கு நேர் மோதின.

இதில், வெல்லமலை எஸ்டேட்டில் இருந்து வந்த பேருந்து மிகவும் பழமையானது மற்றும் பிரேக் பிடிக்காததால், பேருந்தை நிறுத்துவதற்காக அங்குமிங்கும் சாலையில் இடித்துக் கொண்டு வந்தது. அப்போது, சாலையின் ஓரம் நின்ற டாடா சுமோ மற்றும் இரண்டு சக்கர வாகனத்தை இடித்து, எதிரே வந்த பேருந்தின் மீது மோதியது.

இந்த விபத்தில், இரண்டு பேருந்துகளில் பயணித்த 30-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அவர்களை 108 மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில், படுகாயமடைந்த மூன்று பேரை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பொங்கல் விடுமுறை என்பதால், சாலைகளில் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் கூட்டம் அலைமோதியது. இந்த சூழ்நிலையில் ஏற்பட்ட இந்த விபத்தில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...