துடியலூரில் அனுமனின் திருவீதி உலாவை வரவேற்று முஸ்லீம் மதத்தினர் இனிப்பு வழங்கினர்

அனுமன் வீதி உலா துடியலூரிலுள்ள பள்ளிவாசல் பாதை வழியாக வரும் பொழுது பள்ளிவாசல் நிர்வாகத்தினர், விழா குழுவினர்களுக்கு கவுரவ செலுத்தும் வகையில் அனைவர்களுக்கும் இனிப்பு வழங்கி குடிநீர் பாட்டில் கொடுத்து சிறப்பித்தனர்.


கோவை: கோவை துடியலூர் அருகிலுள்ள விஸ்வநாதபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ குபேர ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா கோலகலமாக நடைபெற்றது. மாலை ஆஞ்சநேயர் திருவீதி உலா விஸ்வநாதபுரம், துடியலூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.



அப்போது, அனுமன் வீதி உலா துடியலூரிலுள்ள பள்ளிவாசல் பாதை வழியாக வரும் பொழுது பள்ளிவாசல் நிர்வாகத்தினர், விழா குழுவினர்களுக்கு கவுரவ செலுத்தும் வகையில் அனைவர்களுக்கும் இனிப்பு வழங்கி குடிநீர் பாட்டில் வழங்கி சிறப்பித்தனர்.

இதில், அனுமன் பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.



இது விழா குழுவினர்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. இதில் துடியலூர் பள்ளிவாசல் தலைவர் சுல்தான், துணைத்தலைவர் ஷேக் பாவா மகபூப், செயலாளர் அமீர் அப்பாஸ் மற்றும் நிர்வாகத்தினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் காவல்துறை உயரதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் இதில் பங்கு பெற்றனர். இப்பகுதியில் மத நல்லிணக்கத்திற்கு இதுஒரு எடுத்துக்காட்டாக திகழ்ந்தது.

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...