தாராபுரத்தில் டிட்டோ ஜாக் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை முறைப்படுத்த வேண்டும், திமுக தேர்தல் வாக்குறுதியான சிபிஎஸ் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோ ஜாக் சார்பில் மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிகுலாபுரம் தலைமை ஆசிரியர் குருசாமி தலைமை தாங்கினார்.



கருங்காலி வலசு தலைமை ஆசிரியர் ஆறுமுகம் மற்றும் பச்சாபாளையம் ஆசிரியர் பார்த்திபன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்தனர்.



ஆர்ப்பாட்டத்தின் போது தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றக்கூடிய 90% ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கக்கூடிய மாநில முன்னுரிமை வலியுறுத்தியும், அரசாணை 243 உடனடியாக ரத்து செய்ய வேண்டும், 2023 அக்டோபர் 12ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், பள்ளி கல்வி இயக்குனர், தொடக்கக் கல்வி இயக்குனர் உடன் டிட்டோ ஜாக் நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகள் தொடர்பான ஆணையை உடனடியாக வெளியிட வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை முறைப்படுத்த வேண்டும், திமுக தேர்தல் வாக்குறுதியான சிபிஎஸ் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தியும் மற்றும் சரண்டர் விடுப்பு தொடர வேண்டும்,ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...