ஆத்துப்பாலம் அருகே நொய்யல் ஆறு ஆக்கிரமிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து வருவாய் ஆய்வாளர் ஆய்வு

கோவை, திருப்பூர் மாவட்டங்களின் உயிர் நாடியாக விளங்கும் நொய்யல் ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகி, சின்னாறு, பெரியாறு என பல கிளை ஆறுகளும், சிற்றாறுகளும் கூடுதுறையில் சங்கமமாகி, நொய்யல் உருவெடுக்கிறது.

ஒரு காலத்தில், கொங்கு மண்டலத்தில் உயிர்களுக்கும், பயிர்களுக்கும் ரத்தநாளமாய் விளங்கிய நொய்யல், கடந்த கால் நுாற்றாண்டு காலத்தில், ஆக்கிரமிப்புகளாலும், ஆலைக்கழிவுகளாலும் இருந்த தடமே மறைந்துபோய் கொண்டிருக்கிறது.

நொய்யலின் வழித்தடத்தை மறித்தும், குளங்களை மூடியும் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள், நொய்யலின் மறைவிற்கு முக்கியப் பங்காற்றுகின்றன.

இந்த விஷயத்தில், அரசுத்துறைகளே முன்னோடியாக விளங்கி, சாலை, பணிமனை என ஏராளமான கட்டமைப்புகளை குளத்தில் அமைத்துள்ளன. அதன் தொடர்ச்சியாக, குளங்களை பல்லாயிரக்கணக்கானோர் ஆக்கிரமித்து, வீடுகளைக் கட்டியுள்ளனர்.

இதனிடையே, ஆப்துப்பாலம் அருகே, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 86-வது வார்டு பூங்காநகர் பகுதியில் நொய்யல் நதியில் அத்துமீறி ஆக்கிரமிப்புபணி நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்தன.



இதனைத்தொடர்ந்து இன்று ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் வடக்கு வருவாய் ஆய்வாளர் உமாபாரதி தலைமையிலான அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சகாபுதீன் என்பவருக்கு சொந்தமான இரும்புக்குடோன் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அக்குடோன் கட்டப்பட்டு வரும் பகுதியை வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, அந்நிலத்தினை சகாபுதீன் முறையாக வாங்கியுள்ளாரா அல்லது ஏதேனும் முறைகேடு நடைபெற்றுள்ளதா என்பதை விசாரிக்க அந்நிலத்தின் பட்டா உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி சென்றுள்ளனர்.



இந்த ஆவணங்கள் மாநகராட்சி நில அளவையர்களின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு பின்பே நொய்யல் ஆற்றின் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.



இதுகுறித்து ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் சையது நமது நிருபரிடம் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சகாபுதீன் என்பவர் ஆத்துப்பாலம் அருகே உள்ள பூங்காநகரில் நொய்யல் ஆற்றின் கரையோரம் நிலத்தினை ஆக்கிரமித்து தற்போது இரும்பு குடோன் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து சகாபுதீனிடம் தொடர்புகொண்டு கேட்டபொழுது அவர் இந்நிலத்திற்கான அனைத்து ஆவணங்களும் என்னிடம் உள்ளதாகவும், அந்நிலத்திற்கு அவர் பட்டா பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். 

நொய்யல் ஆறு பாதுகாப்பு சட்டவிதிகளின் படி அந்த ஆற்றுப்படுகையில் இருந்து ஐந்து மீட்டர் தூரம் வரை மாநகராட்சி வசமே இருக்க வேண்டும். ஆனால், தற்போது சகாபுதீன் நொய்யல் ஆற்றங்கரையை ஒட்டியே கட்டிடம் கட்டி வருகிறார். இதற்கு எவ்வாறு மாநகராட்சி நிர்வாகம் ஒப்புதல் அளித்திருக்கும் என்பதில் சந்தேகம் எழுகிறது. 



அந்த ஆவணங்களை காண நான் கேட்டதற்கும், அரசு தரப்பில்இருந்து கேட்டால் மட்டுமே காண்பிக்க முடியும் என்றும், வேறு யாரிடமும் அதனை காண்பிக்க முடியாது என்றும் அவர் கூறுவது மேலும் சந்தேகத்தை வழுப்படுத்துகிறது.

தற்போது, நொய்யல் ஆற்றில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை மட்டும் மாவட்ட நிர்வாகம் மீட்டுக்கொடுத்தால் போதும். எங்களது குழுவினரும், பூங்கா நகர் பகுதி மக்களும் இணைந்து அதனை தூர்வார தயாராக உள்ளோம்.



மேலும், இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் கவணத்திற்கு எடுத்துச்செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. நொய்யலின் ஆக்கிமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்" என ஓசை சையது கூறினார்.



Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...