கோவை வந்தடைந்தன தித்திக்கும் மாம்பழங்கள்

மாம்பழத்தை விரும்பாதவர் மாநிலத்தில் உண்டோ! என்ற கூற்றுக்கேற்ப குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பழம் மாம்பழம். கோடை காலத்தின் தொடக்க நேரத்தில் மாம்பழங்கள் நம் ஊர் மார்க்கெட்டுகளில் இடம்பிடிக்கிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு முன்கூட்டியே மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.



சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்கள் அதிக வெப்ப நிலை கொண்ட மாவட்டங்கள் ஆகும். இங்கு தான் அதிக அளவில் மாம்பழங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு மொத்தமாக சுமார் 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மாம்பழங்கள் பயிரிடப்படுகின்றன.



இம்மாவட்டங்களில் உற்பத்தியான மாம்பழங்கள் தற்போது உண்பதற்கு தயாரான நிலையில் கோவை மார்கெட்டுகளில் இறங்கியுள்ளன. இருந்த போதும் கடந்த அண்டை விட இந்தாண்டு மாம்பழ வரத்து குறைவாக உள்ளதாகவும், அதனால் வியாபாரம் மந்தமான நிலையில் இருப்பதாகவும் கோவை மொத்த வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.



இது குறித்து உக்கடம் பகுதியில் பழ மண்டி வைத்திருக்கும் வியாபாரி ஷாஜகான் கூறியதாவது:-

வழக்கமாக மாம்பழ வரத்து பிப்ரவரி மாதம் தொடங்கி ஜுலை மாதம் வரை இருக்கும். இந்த வருடம் பருவ மழை பொய்த்துப் போனதால் மாங்காய்கள் வரத்து மிகவும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 75 முதல் 80 சதவிகிதமாக இருந்த மாங்காய் வரத்து தற்போது 35 சதவிகிதமாக குறைந்துள்ளது.



வகைகள்

மாம்பழங்களில் பல்வேறு வகைகள் உள்ளன. அதில், செந்தூரம், நீலம், பங்கனபள்ளி, நெடுஞ்சோலை, இமாம் பசந்த், ஆபூஸ், கிளிமூக்கு போன்ற ராகங்கள் அதிகம் விற்பனையாகின்றன. மாங்காய் வரத்து குறைவு என்பதோடு, இந்த ஆண்டு வியாபாரமும் மந்தமான நிலையில் தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.



விலை விபரம்- (கிலோ) (மொத்த வியாபாரம்)

செந்தூரம் - ரூ.60

பங்கனபள்ளி - ரூ.80

நெடுஞ்சோலை - ரூ.60

இமாம் பசந்த் - ரூ.150

ஆபூஸ் - ரூ.120

கிளிமூக்கு - ரூ.20

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...