கோவை வந்தடைந்தன தித்திக்கும் மாம்பழங்கள்

மாம்பழத்தை விரும்பாதவர் மாநிலத்தில் உண்டோ! என்ற கூற்றுக்கேற்ப குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பழம் மாம்பழம். கோடை காலத்தின் தொடக்க நேரத்தில் மாம்பழங்கள் நம் ஊர் மார்க்கெட்டுகளில் இடம்பிடிக்கிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு முன்கூட்டியே மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.



சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்கள் அதிக வெப்ப நிலை கொண்ட மாவட்டங்கள் ஆகும். இங்கு தான் அதிக அளவில் மாம்பழங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு மொத்தமாக சுமார் 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மாம்பழங்கள் பயிரிடப்படுகின்றன.



இம்மாவட்டங்களில் உற்பத்தியான மாம்பழங்கள் தற்போது உண்பதற்கு தயாரான நிலையில் கோவை மார்கெட்டுகளில் இறங்கியுள்ளன. இருந்த போதும் கடந்த அண்டை விட இந்தாண்டு மாம்பழ வரத்து குறைவாக உள்ளதாகவும், அதனால் வியாபாரம் மந்தமான நிலையில் இருப்பதாகவும் கோவை மொத்த வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.



இது குறித்து உக்கடம் பகுதியில் பழ மண்டி வைத்திருக்கும் வியாபாரி ஷாஜகான் கூறியதாவது:-

வழக்கமாக மாம்பழ வரத்து பிப்ரவரி மாதம் தொடங்கி ஜுலை மாதம் வரை இருக்கும். இந்த வருடம் பருவ மழை பொய்த்துப் போனதால் மாங்காய்கள் வரத்து மிகவும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 75 முதல் 80 சதவிகிதமாக இருந்த மாங்காய் வரத்து தற்போது 35 சதவிகிதமாக குறைந்துள்ளது.



வகைகள்

மாம்பழங்களில் பல்வேறு வகைகள் உள்ளன. அதில், செந்தூரம், நீலம், பங்கனபள்ளி, நெடுஞ்சோலை, இமாம் பசந்த், ஆபூஸ், கிளிமூக்கு போன்ற ராகங்கள் அதிகம் விற்பனையாகின்றன. மாங்காய் வரத்து குறைவு என்பதோடு, இந்த ஆண்டு வியாபாரமும் மந்தமான நிலையில் தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.



விலை விபரம்- (கிலோ) (மொத்த வியாபாரம்)

செந்தூரம் - ரூ.60

பங்கனபள்ளி - ரூ.80

நெடுஞ்சோலை - ரூ.60

இமாம் பசந்த் - ரூ.150

ஆபூஸ் - ரூ.120

கிளிமூக்கு - ரூ.20

Newsletter

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...