தொழில்துறையின் மானிய கடன் வழங்கக்கோரி நரிக்குறவர் சமூகத்தினர் மனு!

பல்லடம் ஆறுமுத்தாம்பாளையம் அடுத்த அறிவொளி நகர் பகுதியில் நரிக்குறவர் சமுதாய பெண்கள் தங்களது தொழிலான ஊசி, பாசி மாலை, மணி தயாரிக்கும் தொழிலை மேம்படுத்த மத்திய அரசும், தமிழக அரசும் தொழில் துறையின் கீழ் கடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.



திருப்பூர்: தொழில்துறையின் மானிய கடன் வழங்க வலியுறுத்தி ஊசி, பாசி மாலை, மணி தயாரிக்கும் நரிக்குறவர் சமூகத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



பல்லடம் தாலுகா ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அறிவொளி நகர் பகுதியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக குறவர் காலனியில் 90க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் வீட்டில் இருந்தபடியே ஊசி, பாசி மாலை, மணி ஆகியவை தயார் செய்து வெவ்வேறு பகுதிகளுக்கு நடந்தும், வாகனங்களிலும் சென்று வியாபாரம் செய்து வருகின்றனர்.



இந்த நிலையில் தங்கள் தொழிலை வளர்ச்சி அடைய செய்யும் வகையில் மத்திய அரசும், தமிழக அரசும் தொழில் துறையின் கீழ் கடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...