கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது காலில் பலத்த எலும்பு முறிவு காயம் ஏற்பட்டது. வேறொரு சம்பவத்தில், மேட்டுப்பாளையம் ரோடு குமாரபுரம் பஸ் நிறுத்தம் அருகே சாலையைக் கடந்த சுமார் 40 வயது அடையாளம் தெரியாத நபர் மீது பைக் மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இரு சம்பவங்களிலும் தொடர்பான வாகன ஓட்டுநர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Coimbatore: கோவையில் ஒரே நாளில் நிகழ்ந்த இரண்டு தனி சாலை விபத்துகளில் ஒரு இளைஞர் மற்றும் அடையாளம் தெரியாத ஒரு நபர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை ராமர்கோவில் வீதி சுவாமி விவேகானந்தா சேவா கேந்திரத்தைச் சேர்ந்த அருள் என்பவரது மகன் அஸ்வின் (21), நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீ கணபதி கிரானைட்ஸ் எதிரே, எதிர்திசையில் வந்த கார் திடீரென வலதுபுறமாக திரும்பிய போது எதிர்பாராதவிதமாக அஸ்வினின் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் நிலைதடுமாறி விழுந்த அஸ்வினின் இடது காலில் பலத்த எலும்பு முறிவு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டிவந்த சோமையம்பாளையம் காலப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த முத்து ராகுல் (31) என்பவர் மீது போக்குவரத்து புலனாய்வு பிரிவு எஸ்.எஸ்.ஐ சரளா வழக்குப்பதிவு செய்துள்ளார்.

இதேபோல், கோவை மேட்டுப்பாளையம் ரோடு குமாரபுரம் பஸ் நிறுத்தம் சக்தி விநாயகர் கோவில் அருகே நேற்று முன்தினம் மற்றொரு விபத்து நிகழ்ந்தது. சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சாலையை மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி கடக்க முயன்றார். அப்போது தெற்கில் இருந்து வடக்கு நோக்கி வந்த பைக், பாதசாரி மீது பலமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அந்த நபருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை உடனடியாக மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து செல்வபுரம் நார்த் ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த பைக் ஓட்டுநர் ஜமீஷா (32) என்பவர் மீது கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...