கோவை துடியலூர் அருகே வேட்டைக்கார சாமி கோவில் கும்பாபிஷேகம் விழா கோலாகலம்!

துடியலூர் அருகேயுள்ள கஸ்தூரிநாயக்கன்புதூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள வேட்டைக்கார சாமி கோவில் கும்பாபிஷேகம் இன்றைய தினம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தண்டபாணி சுவாமிகள், ராமானந்த குமரகுரு சாமிகள் ஆகியோர் பங்கேற்று கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.



கோவை: துடியலூர் அடுத்த பன்னிமடை அருகேயுள்ள வேட்டைக்கார சாமி கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

பன்னிமடை அருகிலுள்ள கஸ்தூரிநாயக்கன்புதூரில் செல்வ கணபதி மற்றும் வேட்டைக்காரன் சாமி திருக்கோயில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழாவானது, கடந்த 24 ஆம் தேதி மங்கல இசை, திருவிளக்கு வழிபாடு, மூல மந்திரம் வழிபாட்டோடு தொடங்கியது.

இதனை தொடர்ந்து பன்னிமடை கிருஷ்ணசாமி கோவிலில் இருந்து முளைப்பாரி எடுத்து வருதல், தீர்த்த குடம் எடுத்து வருதல், மகா கணபதி வழிபாடு, அடியார்களுக்கு காப்பு அணிவித்தல், புற்று மண் வழிபாடு உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன.



இதனையடுத்து, கணபதி வழிபாடு, முதற்கால வேள்வி பூஜை, இரண்டாம் கால வேள்வி பூஜை, புனித நீர் தெளித்தல், 108 மூலிகை அருள்நிறை ஏற்றுதல், திருக்குடங்கள் வலம் வருதலதைத் தொடர்ந்து கோபுரக் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.



அதைத் தொடர்ந்து வேட்டைக்கார சாமிக்கு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பின்னர் அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தண்டபாணி சுவாமிகள், ராமானந்த குமரகுரு சாமிகள் பங்கேற்று கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.



இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ அருண்குமார், மாவட்ட கவுன்சிலர் கார்த்திக், கவுன்சிலர் ஆறுச்சாமி முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள், பி.வி.மணி, செல்வராஜ், ஊராட்சி மன்ற தலைவர் பி.எஸ்.எம். ரத்தின மருதாசலம், திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, ஊராட்சி துணைத் தலைவர் அருள்குமார், முன்னாள் கவுன்சிலர் சரவணன், அய்யாசாமி, மோகன்ராஜ், காளியப்பன், ராஜேந்திரன், கோபால்சாமி. கோவில் நிர்வாகிகள் தர்மன், குப்புராஜ், சதீஷ்குமார், விஜயகுமார், ரவிச்சந்திரன், சுப்பிரமணியம், பிரபு, பழனிசாமி, கிருஷ்ணமூர்த்தி, பாஸ்கரன், பிரகாஷ், செல்வம், நட்ராஜ், பார்வதி, நாச்சிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சிகளை இந்த கோவில் தலைவர் ரங்கசாமி, செயலாளர் அசோகன், பொருளாளர் வெள்ளிங்கிரி ஆகியோர் செய்திருந்தனர்.

Newsletter

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...

Systemic Corruption Persists Unabated: Coimbatore Unit of Anti-Corruption Movement

The Coimbatore district unit of the Anti-Corruption Movement submitted a representation to Tamil Nadu Chief Minister C J...

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...