சரவணம்பட்டியில் பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம் - பரபரப்பு!

கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த ஆசைத்தம்பி என்ற கூலி தொழிலாளியின் மனைவி மற்றும் குழந்தைகள் சொந்த ஊருக்கு சென்ற நிலையில், ஆசைத்தம்பி தனியாக இருந்த வீட்டில் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து, பாதி அழுகிய நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: சரவணம்பட்டி அருகே பூட்டிய வீட்டிற்குள் பாதி அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சரவணம்பட்டி பகுதியில் குடும்பத்துடன் தங்கி கூலி வேலை பார்த்து வந்தவர் ஆசைத்தம்பி. இவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் சொந்த ஊரான தஞ்சாவூருக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில், வீட்டின் உள்பக்கமாக தாழிட்டு கொண்டு ஆசைத்தம்பி உறங்கியதாக தெரிகிறது.

இதனிடையே ஆசை தம்பியின் மாமியார் அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்வதற்காக அழைத்துள்ளார். அழைப்பை எடுக்காததால் அருகில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுத்து அழைக்க கூறியுள்ளார்.

இந்நிலையில் வீட்டின் அருகில் இருப்பவர்கள் வந்து பார்த்த போது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாக தெரிகிறது. இதனையடுத்து அவர்கள், தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர், வீட்டின் கதவை உடைத்துள்ளனர். அப்போது, ஆசைத்தம்பியின் உடல் பாதி அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆசைதம்பி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...