சரவணம்பட்டியில் பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம் - பரபரப்பு!

கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த ஆசைத்தம்பி என்ற கூலி தொழிலாளியின் மனைவி மற்றும் குழந்தைகள் சொந்த ஊருக்கு சென்ற நிலையில், ஆசைத்தம்பி தனியாக இருந்த வீட்டில் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து, பாதி அழுகிய நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: சரவணம்பட்டி அருகே பூட்டிய வீட்டிற்குள் பாதி அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சரவணம்பட்டி பகுதியில் குடும்பத்துடன் தங்கி கூலி வேலை பார்த்து வந்தவர் ஆசைத்தம்பி. இவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் சொந்த ஊரான தஞ்சாவூருக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில், வீட்டின் உள்பக்கமாக தாழிட்டு கொண்டு ஆசைத்தம்பி உறங்கியதாக தெரிகிறது.

இதனிடையே ஆசை தம்பியின் மாமியார் அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்வதற்காக அழைத்துள்ளார். அழைப்பை எடுக்காததால் அருகில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுத்து அழைக்க கூறியுள்ளார்.

இந்நிலையில் வீட்டின் அருகில் இருப்பவர்கள் வந்து பார்த்த போது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாக தெரிகிறது. இதனையடுத்து அவர்கள், தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர், வீட்டின் கதவை உடைத்துள்ளனர். அப்போது, ஆசைத்தம்பியின் உடல் பாதி அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆசைதம்பி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....