கோவை முதல் விற்பனையகத்தை தொடங்கும் ஆர்ட்டினாக்ஸ் மாடுலர் கிச்சன்ஸ்

ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் நவீன மாடுலர் கிச்சன்களை தயாரித்து வழங்கும் ஆர்ட்டினாக்ஸ், அதன் முதல் காட்சியகத்தை இன்று கோவை மாவட்டம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் தொடங்கியுள்து. 



இதன் துவக்க விழாவில் பிரபல திரைப்பட இயக்குனரான பாலா, கோவை மாநகரின் காவல்துறை உதவி ஆணையர் அனிதா, பிரபல திரைப்பட நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஆர்எம்பி கம்ப்ரஸர்ஸ்-ன் பிரைவேட் லிமிடெட்-ன் நிர்வாக இயக்குநரான தேவிகா ரமேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று விற்பனையகத்தினை துவக்கி வைத்தனர்.

இந்த விற்பனை மையத்தில் மாடுலர் கிச்சன்கள் டேபிள்வேர், வார்ட்ரோப்கள், ஸ்டெயின்லெஸ் ஸ்டீ; பர்னிச்சர், கண்ணாடிகள் மற்றும் வேனிட்டிஸ் என பல்வேறு வகைகளில் ஆர்ட்டினாக்ஸ் பிராண்டின் பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.



இந்நிகழ்ச்சியில் கோவை ஆர்ட்டினாக்ஸ் காட்சியகத்தின் பங்குதாரர் அருண் நாகராஜ் பேசுகையில், "இந்திய சமையலறைகள் மற்றும் சமையல் பழக்கவழக்கங்கள் மாறியிருக்கின்றன. இந்தியர்கள் விரும்புகிற சமையலறைகளின் வகை மற்றும் விருப்பத்தேர்வில் குறிப்பிடத்தக்க நகர்வு கண்கூடாக தெரிகிறது. இன்றைய காலகட்டத்தில் சமையலறைகள் என்பவை மெல்லியதாக, நவீன தோற்றத்துடன் ஸ்டைலானதாக, நடைமுறை வசதி கொண்டதாக தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்டதாக இருப்பது அவசியமாகும்.

100 சதவிகிதம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் உருவாக்கப்பட்டுள்ள சமையலறைகளின் வழியாக இத்தேவையை இந்த பிராண்டு பூர்த்தி செய்ய விழைகிறது. ஒற்றை வடிவமைப்பில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டேபிள் டாப்புடன் சிங்க் மற்றும் ஒரு ஐலேண்ட் சிம்னி, ஒருங்கிணைக்கப்பட்ட பிற சாதனங்கள், சமையல் பணி மேற்கொள்வதற்கு ஒரு தாராளமான இடவசதி மற்றும் விருப்பத்திற்கேற்ற பிரத்யேக வண்ணத்தில் கிடைப்பது ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு இங்கு கிடைக்கக்கூடிய ஈர்ப்பு அம்சங்களாக இருக்கின்றன" என்று கூறினார். 



ஜின்டால் ஸ்டெயின்லெஸ் லிமிடெடின் தலைமை செயல் அலுவலர் டோமி செபாஸ்டியன் பேசுகையில், "இந்திய வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களின் தேவைகள் மாறி வருகின்றன. மாடுலர் கிச்சன்கள், பிரிமீயம் வீட்டு அலங்காரம் ஆகியவற்றின் மீது செலவு செய்யவும், அவர்கள் முதலீடு செய்யவும் அவர்கள் தயாராக இருக்கின்றனர்.

ஆர்ட்டினாக்ஸ், இந்திய சந்தைகளுக்கு நவீன மாடுலர் கிச்சன்களை ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் வழங்குகிறது. ஈரமான மற்றும் எண்ணெய் நிறைந்த இந்திய சமையல் நிலைகளுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கிச்சன் நவீன மாடலாகவும், நேரோடியாகவும் மற்றும் குறைந்த அளவுள்ளதாகவும், அதேவேளையில் நமது பாரம்பரிய தேவைகளை பூர்த்திசெய்ய கவனம் செலுத்துவதாகவும் இருக்கிறது" என்றார்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...