தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பாக நேற்று செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டது. இக்கண்காட்சி பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் 24.02.2017 மற்றும் 25.02.2017 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகின்றன. புகைப்படக்கண்காட்சியினை கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.பி.நாகராஜன், சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணன் ஆகியோர் பார்வையிட்டனர். 

மேலும், இந்தப்புகைப்படக் கண்காட்சியில் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், நாட்டுக்கு உழைத்த தலைவர்களுடன் உள்ள புகைப்படங்களும் மற்றும் பல்வேறு புதிய திட்டங்கள் தொடக்க விழா குறித்த புகைப்படங்களும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற அமைச்சர் பெருமக்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் பல்வேறு அரசு விழாக்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிகழ்ச்சிகளின் புகைப்படங்களும் இடம்பெற்றுளளன. இக்கண்காட்சியினை பொது மக்கள் பார்த்து அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்வதுடன் பயன்பெரும் வகையில் உள்ளது.

இக்கண்காட்சி பணியினை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சுகுமார்  ஆகியோர் மேற்கொண்டனர்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...