வடமாநில தொழிலாளர்களை பணியமர்த்துவதை கண்டித்து உதகையில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

வடமாநில தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது என வலியுறுத்தி உதகையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துடன் இணைந்து 200க்கும் மேற்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில், வடமாநில தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுவதை கண்டித்து அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழகத்தில் கொரோனா காலத்திற்கு பின் வடமாநில தொழிலாளர்களின் வருகை அதிகரித்து கொண்டே வருகிறது. கட்டுமானம், தொழிற்சாலைகள் என பல்வேறு துறைகளில் பணியாற்றும் அவர்கள் வருகையால் தமிழக தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர்.

குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தொழிலில் மட்டுமே வட மாநில தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்ட நிலையில் தற்போது கட்டுமானம் மற்றும் கேரட் தொழில்களிலும் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதனால் மலை மாவட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர்.



இந்நிலையில், உதகையில் இன்று தமிழக மக்கள் முன்னேற்ற கட்சியினருடன் இணைந்து 200க்கும் மேற்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



உதகை ஏடிசி பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழில் நிறுவன முதலாளிகள் உள்ளூர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். வடமாநில தொழிலாளர்கள் வருகையால் உள்ளூர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.



மேலும் குற்றச்செயல்கள் அதிகரித்து கொண்டே வருவதால் வடமாநில தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். அமைப்பு சாரா தொழிலாளர்களின் இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...