வடமாநில தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது என வலியுறுத்தி உதகையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துடன் இணைந்து 200க்கும் மேற்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில், வடமாநில தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுவதை கண்டித்து அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் கொரோனா காலத்திற்கு பின் வடமாநில தொழிலாளர்களின் வருகை அதிகரித்து கொண்டே வருகிறது. கட்டுமானம், தொழிற்சாலைகள் என பல்வேறு துறைகளில் பணியாற்றும் அவர்கள் வருகையால் தமிழக தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர்.
குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தொழிலில் மட்டுமே வட மாநில தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்ட நிலையில் தற்போது கட்டுமானம் மற்றும் கேரட் தொழில்களிலும் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதனால் மலை மாவட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர்.

இந்நிலையில், உதகையில் இன்று தமிழக மக்கள் முன்னேற்ற கட்சியினருடன் இணைந்து 200க்கும் மேற்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உதகை ஏடிசி பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழில் நிறுவன முதலாளிகள் உள்ளூர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். வடமாநில தொழிலாளர்கள் வருகையால் உள்ளூர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் குற்றச்செயல்கள் அதிகரித்து கொண்டே வருவதால் வடமாநில தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். அமைப்பு சாரா தொழிலாளர்களின் இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
தமிழகத்தில் கொரோனா காலத்திற்கு பின் வடமாநில தொழிலாளர்களின் வருகை அதிகரித்து கொண்டே வருகிறது. கட்டுமானம், தொழிற்சாலைகள் என பல்வேறு துறைகளில் பணியாற்றும் அவர்கள் வருகையால் தமிழக தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர்.
குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தொழிலில் மட்டுமே வட மாநில தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்ட நிலையில் தற்போது கட்டுமானம் மற்றும் கேரட் தொழில்களிலும் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதனால் மலை மாவட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர்.
இந்நிலையில், உதகையில் இன்று தமிழக மக்கள் முன்னேற்ற கட்சியினருடன் இணைந்து 200க்கும் மேற்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உதகை ஏடிசி பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழில் நிறுவன முதலாளிகள் உள்ளூர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். வடமாநில தொழிலாளர்கள் வருகையால் உள்ளூர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் குற்றச்செயல்கள் அதிகரித்து கொண்டே வருவதால் வடமாநில தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். அமைப்பு சாரா தொழிலாளர்களின் இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.