கோவையில் காணாமல் போன 8 அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை மீட்டு தரக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் புகார்


கோவை மாவட்டத்தில் காணாமல் போன 8 அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை மீட்டு தரக்கோரி இன்று கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் அ.தி.மு.க வினர் புகார் மனு அளித்தனர்.

கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் அ.தி.மு.க கட்சியில் மாநகராட்சி 52-வது பகுதி துணை செயலாளராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் காணாமல் போன 8 அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை மீட்டுத் தரக்கோரி, மாநகர காவல் ஆணையர் அமல்ராஜிடம் புகார் மனு அளித்தார்.

கோவை மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற உறுப்பினர்களில் கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டியை தவிர்த்து மீதமுள்ள 8 சட்டமன்ற உறுப்பினர்களை கடந்த ஒரு வார காலமாக காணவில்லை எனவும், சட்டமன்ற உறுப்பினர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும், அவர்களது தொலைபேசி எண்கள் அனைத்து வைக்கப்பட்டு இருப்பதாகவும் சீனிவாசன் தெரிவித்தார்.

இதனால் நலத்திட்டப்பணிகள் முடங்கி இருப்பதாகவும், காணாமல் போன சட்டமன்ற உறுப்பினர்களை கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்தார்.

மேலும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவினால் அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் எளிதில் அணுகக்கூடிய முதலமைச்சராக இருப்பதாகவும், அ.தி.மு.க தொண்டர்களின் முழு ஆதரவும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...