வேலைவாய்ப்பற்ற படித்த இளைஞர்களுக்கு உதவித்தொகை வழக்கும் திட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்பு

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காத படித்த இளைஞர்களுக்கு மாதந்தோறும் தமிழக அரசால் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ. 150, பிளஸ் 2 படித்தவர்களுக்கு 200 ரூபாய், பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரிகளுக்கு 300 ரூபாய் வழங்கும் திட்டம் அமலில் உள்ளது. 

இந்த உதவித்தொகையை பெற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்தாண்டுகளுக்கு மேல் காத்திருப்போர் பட்டியலில் இருப்பவராக இருக்க வேண்டும்.

2017-ஆம் ஆண்டு மார்ச் 31ம் தேதியன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதிற்கு மிகாமலும் மற்றவர்கள் 40 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

மேலும், மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் 50 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமலும் இருக்க வேண்டும். இதில், மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களுக்கு வருமான உச்சவரம்பு இல்லை.

இதற்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் பள்ளி அல்லது கல்லூரிப் படிப்பை தமிழகத்திலேயே முடித்து இங்கேயே 15 ஆண்டுகள் வசித்தவராகவும், முற்றிலும் வேலையில்லாதவராக இருக்க வேண்டும்.

மேலும், மனுதாரர் உதவித்தொகை பெறும் காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருக்க வேண்டும்.

ஏற்கனவே, உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகள் தங்களின் சுயஉறுதி மொழி ஆவணத்தை வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் வேலைவாய்ப்பு பதிவட்டை நகலுடன் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைத்து தொடர்ந்து உதவித் தொகை பெறலாம்.

இந்த உதவித் தொகை பெறுவதற்கு தகுதியுடையவர்கள் உடனடியாக கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்படிவம் பெற்றுக்கொள்ளலாம். அல்லது https://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...