இருமுறை பரிசோதிக்கப்பட்டது: பிரித்வி-II ஏவுகணை சோதனை வெற்றி

புவனேஸ்வர்: ஆயிரம் கிலோ எடையுள்ள அணு ஆயுதங்களை சுமந்தபடி பாய்ந்துச் சென்று 350 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்ட பிரித்வி-II ஏவுகணை ஒடிசா மாநிலத்தில் உள்ள சாந்திப்பூர் பகுதியில் இருந்து நேற்று இருமுறை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

நாட்டின் பாதுகாப்புக்காக பிரித்வி ரக ஏவுகணைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் பிரித்வி-II வகை ஏவுகணை சுமார் 350 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்துச் சென்று தாக்கும் சக்தி கொண்டது. பிரித்வி-II ரக ஏவுகணைகள் ராணுவ பயன்பாட்டுக்காக ஏற்கனவே சேர்க்கப்பட்டு விட்டது. என்றாலும் அது அடிக்கடி நவீனமாக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று பிரித்வி-II ரக ஏவுகணை சோதித்து பார்க்கப்பட்டது.

இந்திய ராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் பிரித்வி-II ஏவுகணையில் தற்போது சில மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி பிரித்வி-II ஏவுகணைகளில் 500 முதல் 1000 கிலோ எடை கொண்ட வெடிப்பொருட்களை வைத்து பயன்படுத்த முடியும். இது 350 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்டது. அணு ஆயுதங்களையும் ஏந்தி செல்லும் இந்த ஏவுகணைகள் திரவ எரிபொருளால் இயங்கும் இரட்டை என்ஜின்கள் கொண்டது. இதனால், 350 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திட்டமிட்ட இலக்கை துல்லியமாகவும், வெற்றிகரமாகவும் தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்டது.

இந்நிலையில், ஒடிசா மாநில கடலோர நகரமான பலசோரில் உள்ள சாந்திப்பூர் ஏவுதளத்தில் இருந்து பிரித்வி-II ஏவுகணை நேற்று காலை 9.35 மணியளவில் இருமுறை விண்ணில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. இந்த இரு சோதனைகளும் வெற்றிகரமாக நடந்தது. குறிப்பிட்ட இலக்கை அந்த ஏவுகணை வெற்றிகரமாக தாக்கியது என இந்திய ராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 12-10-2009 அன்றும் இதேபோல் இருமுறை பிரித்வி-II ஏவுகணைகள் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது, நினைவிருக்கலாம்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...