முதுமையை தள்ளிப்போடும் புதிய சேர்மம் கண்டுபிடிப்பு

வாஷிங்டன்: மனிதனின் முதுமை அடையும் தன்மையை தள்ளிப்போடும் புதிய மருந்து ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மனிதன் முதுமை அடையாமல் தடுக்கும் பேராசையில் இன்று வரை உலகில் பல நாடுகளில் உள்ள மருத்துவ விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சயில் ஈடுபட்டு வருகின்றனர். மனிதன் முதுமையடையும் போது ஞாபக மறதி, புத்திகூர்மை குறைவு, நரம்பு மண்டலம் பாதிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, மற்றும் உறுப்புகள் செயலிழப்பு போன்ற பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி இறுதியில் மரணத்தை தழுவ வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. 

முதுமைக்கு காரணம்:

மனிதனின் முதுமைக்கு காரணம் உடம்பில் உள்ள செல்கள் ஜீன்கள், டி.என்.ஏ., அமைப்பு போன்றவற்றை சரியாக பாதுகாக்க முடியாமல் போவது தான் என்பதை விஞ்ஞானிகள் ஆரய்ந்து கண்டுபிடித்துள்ளனர். இருந்தாலும் செல்களில் சக்தி உருவாகக் கூடிய மைட்டோகோன்டிரியம் பகுதிகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் போது முதுமையை கட்டுப்படுத்த முடியும் என்று அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனத்தின் விஞ்ஞானி வில்ஹெம் போர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

என்.ஏ.டி:

நிகோடினமைடு அடினைன் டைலுசியோடைடு என்ற சேர்மம் குறையும் போது உடலில் உள்ள செல்களில் டி.என்.ஏ.அமைப்பு மற்றும் ஜீன்களில் பாதிப்பு ஏற்படுவதை இவர்கள் கண்டுபிடித்துள்ளனர். என்.ஏ.டி., சேர்மம் சேர்க்கப்படும் போது செல்களின் ஆரோக்கியம் கூடுவதையும், ஜீன்கள் மற்றும் டி.என்.ஏ., அமைப்பு பாதிப்பு அடைவது தடுக்கப்படுவதையும் கண்டுணர்ந்துள்ளனர். 

ஆராய்ச்சீயில் நிரூபணம்

என்.ஏ.டி.,யை எலிகளுக்கும், புழுக்களுக்கும் செலுத்தி சோதித்ததில் அவற்றின் செல் ஆரோக்கியம் மேம்பட்டு வாழ்நாள் கூடியுள்ளதையும் வில்ஹெம்போர் தலைமையிலான மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...