பூமியில் உயிரினங்கள் தோன்ற செவ்வாய் கிரகம் தான் காரணமா? ஆராய்ச்சியில் போட்டிபோடும் நாடுகள்

பூமி எவ்வாறு தோன்றியது? அதில் மனிதர்கள் எவ்வாறு தோன்றினர்? சூரிய குடும்பத்தை பொருத்தவரை பூமியில் உயிரினம் தோற்றம் பெற முன்பு செவ்வாயில் உயிரினங்கள் செழிப்பாக வாழ்ந்திருக்கின்றன.

சுமார் 360 கோடி வருடங்களுக்கு முன்பு செவ்வாய் கிரகம் இன்றைய பூமியைப் போல உயிரினங்கள் வாழ எல்லாத் தகுதியுடன் மிகவும் செழிப்பாக இருந்துள்ளது, உயிரினங்களும் வாழ்ந்துள்ளன.

அதன்பின் செவ்வாய்கிரகத்தில் மிகப்பெரிய விண்கல் ஒன்று மோதிய காரணத்தினால் அங்கு வாழ்ந்த அனைத்து உயிரினங்களும் அழிந்திருக்கலாம் என நம்பப்பட்டு வருகின்றது.

இதற்கான சான்றாக இன்றும் செவ்வாய் கிரகத்தில் விண்கல் மோதிய சுவடு காணப்படுகின்றது. இவ்வாறான மோதலினால் சிதறிய விண்கற்களில் 7.5 சதவிதம் பூமியை வந்தடைந்தன கூறப்படுகிறது.

அமெரிக்க விஞ்ஞானிகள் 1984இல் அண்டார்டிக்காவில் Allan Hills 84001 (ALH84001) என்ற 1.95kg எடை கொண்ட விண்கல்லை கண்டெடுத்தார்கள். இது செவ்வாயில் ஏற்பட்ட மோதலினால் சிதறி பூமிக்கு வந்த கற்களில் ஒன்றாக இருக்கலாம் என யுகித்தனர். 1996இல் நாசா விஞ்ஞானி David Mckay என்பவர் இதில் “நானோபாக்டிரியாவின்” எச்சம் இருப்பதை கண்டறிந்தார்.

இதை தொடர்ந்து செவ்வாய்கிரக ஆராய்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது.இந்நிகழ்வின் பின் அன்றைய அமெரிக்க ஜனாதிபதி “பில்கிளிண்டன்” செவ்வாய் கிரகத்திற்கு ஆளில்லா விண்கலங்களை அனுப்பும் திட்டத்திற்கு பெரும் தொகை ஒதுக்குவதாகவும் அறிவித்தார்.

மனிதர்களாகிய நமக்கு செவ்வாய் கிரகம் தான் அடிப்படை என பல விஞ்ஞானிகள் தீர்க்கதனமாக நம்புகின்றார்கள். இதை தொடர்ந்து செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் அனைத்து நாடுகளும் ஈடுபட தொடங்கின.



இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் செவ்வாய் கிரகத்தை ஆராய ‘மங்கள்யான்’ விண்கலம் உருவாக்கப்பட்டு கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் 5–ந் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. மங்கள்யான் விண்கலம் 2014 செப்டம்பர் மாதம் முதல் செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வது குறித்து ஆராய நாசா சார்பில் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.  அது தொடர்ந்து செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை அனுப்பி வருகிறது.

செவ்வாய் கிரகத்தில் உயிரினம் வாழ்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய ஐரோப்பிய யூனியன், ரஷ்யா ஆகியவை கூட்டாக இணைந்து புதிய விண்கலத்தை அந்த கிரகத்துக்கு அனுப்புகின்றன. அதற்கான விண்கலம் இன்று அனுப்பபடுகிறது.அக்டோபர் 19-ம் தேதி அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை சென்றடையும். பின்னர் செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வந்து அந்த கிரகத்தை ஆய்வு செய்யும்.  அதேநேரம் ஜியாபரேலி என்ற வட்டவடிவிலான ஆய்வு கலம் ‘டிஜிஓ’ விண்கலத்தில் இருந்து பிரிந்து செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி ஆய்வு செய்யும். இந்த முயற்சி வெற்றி பெற்றால் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் மேலும் முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

செவ்வாய் கிரகத்தில் வரும் 2039-ம் ஆண்டுக்குள் விண்வெளி ஆராய்ச்சி வீரர்களை தரையிறங்க வைக்க முடியும் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்தை நீண்ட நாட்களாகவே அதிக முன்னுரிமை பட்டியலில் வைத்துள்ளது நாசா.

இன்றளவும் நாசாவின் ஆளில்லா விண்கலங்கள் செவ்வாயில் தேடிக்கொண்டிருப்பது தண்ணீரையும் தாதுப்பொருட்களையும் மட்டுமல்ல. அங்கு வாழ்ந்த உயிரினங்களின் எச்சங்கள் மற்றும் ஆதாரங்களையும் தான். அவ்வாறான நிறைய ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றாலும் அதனை பற்றிய முழுமையான தகவல்களை ரகசியமாக வைத்துள்ளனர் நாசா.

செவ்வாய் கிரகத்தை ஒரு முறை சுற்றிவர எடுத்துக்கொள்ளப்படும் காலம்  687 நாட்கள். பூமியின் நிலப்பகுதியும் (Land mass) செவ்வாய் கிரகத்தின் நிலப்பகுதியும் கிட்டத்தட்ட சமம் தான்.

சூரிய குடும்பத்தில் இருக்கும் மலைகளிலேயே மிக உயரமான மலை செவ்வாய் கிரகத்தில் தான் உள்ளது. பெயர் : ஒலம்பஸ் மோன்ஸ் (Olympus Mons) உயரம் : 21 கிமீ

சூரியக் குடும்பத்தில் மாபெரும் தூசி புயல்களை உள்ளடக்கியதும் செவ்வாய் கிரகம் தான். அவைகள் மாதக்கணக்கில் ஒட்டுமொத்த கிரகத்தையும் சூழ்ந்து வீசும் என்பது குறிப்பிடத்தக்கது.

மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரக்தில் இருந்து கழிந்த பகுதிகள் பூமியில் விழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலைநாட்டவர்கள் ரோமானிய நாட்டு போர் கடவுளின் பெயரை தான் செவ்வாய்க்கு சூட்டியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சனி கோள் அதாவது சாட்டர்ன் கிரகத்திற்கு இருப்பது போன்ற 'ரிங்', செவ்வாய் கிரகத்திற்கும் உருவாகும். ஆனால் அதற்கு 20 - 40 மில்லியன் ஆண்டுகள் ஆகும்.

பூமிக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் உள்ள இடைவெளி  54.6 மில்லியன் கிமீ.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...