அட்டகாசம் செய்யும் முதல் குளோனிங் குரங்கு

உலகிலேயே முதன்முறையாக குளோனிங் முறையில் இரண்டு குரங்குகளை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்


உலகிலேயே முதன்முறையாக குளோனிங் முறையில் இரண்டு குரங்குகளை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

சோமாடிக் செல் அணுசக்தி பரிமாற்றம் என்னும் குளோனிங் முறையில் 1996 ஆம் ஆண்டு டாலி என்ற செம்மரி ஆடு பிறந்தது. செல்லில் உள்ள உட்கருவை, டிஎன்ஏ-வுடன் சேர்த்து, கரு நீக்கப்பட்ட முட்டையில் பொருத்துவதன் மூலம் புது உயிரினத்தை உருவாக்குவதே சோமாடிக் முறையாகும். இந்தத் நுட்பத்தை பயன்படுத்தி பிரைமேட் வகை உயிரினத்தை முதல் முறையாக உருவாக்கியுள்ளனர் விஞ்ஞானிகள். இந்தத் தொழில்நுட்பம் மூலம் செம்மரி ஆடு மட்டுமின்றி பசுக்கள், பன்றிகள், நாய்கள், முயல்கள், எலிகள் என 20க்கும் அதிகமான உயிரினங்களை உருவாக்கி சாதனை படைத்தனர்.



இந்நிலையில் தற்போது முதன்முறையாக குளோனிங் முறையில் இரண்டு குரங்குகளை ஷாங்காயில் உள்ள சீன அகாடமி ஆஃப் சைன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூரோசீனஸ் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். 79 முறை தோல்வியடைந்து, கடைசியில் 127 முட்டைகளில் இருந்து 2 குரங்குகளை உருவாக்கியுள்ளனர். 

குரங்குகளை குளோனிங் முறையில் உருவாக்குவது சாத்தியம் என்பதால் மனித குழந்தைகளையும் உருவாக்குவது விரைவில் சாத்தியமாகும் என கூறப்படுகிறது. ஆனால் குழந்தைகளை குளோனிங் முறையில் உருவாக்குவது நிறைய பிரச்சனைகளை உருவாக்க வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், மரபணு ஒத்த குரங்குகள் மருத்துவ ஆராய்ச்சிகள் மற்றும் சோதனைகளை எளிதாக்க உதவும் என்கின்றனர். மனித குளோனிங் செய்வது எங்களது நோக்கமில்லை எனவும் சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல் இன்னும் பல குரங்குகளை உருவாக்கவும் சீன விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...