'கலர் தெரபி': இயற்கை மருத்துவத்தில் புதிய யுக்தி

நெய்வேலியைச் சேர்ந்த 22 வயது சதீஷ்குமாருக்கு குடலில் புண் ஏற்பட்டு, அல்சராக மாறியது. சதீஷ்குமார் பரிசோதித்த மருத்துவமனைகளில் மருத்துவ சோதனைகள், மருந்துகள் கொடுத்த பின்னர், அவருக்கு மாத்திரைகள் மட்டுமே வழங்கமுடியும், அவரை குணப்படுத்தமுடியாது என்று கைவிரித்துவிட்டார்கள்.

''மல்டி ஸ்பெஷலிட்டி மருத்துவமனையில் பல வண்ணங்களில் மாத்திரைகள் கொடுத்தார்கள். இறுதியில், எனக்கு ஏற்பட்டுள்ள சீர்கேட்டை சரிசெய்ய முடியாது, வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிடவேண்டும் என்று கூறிவிட்டார்கள். ஆனால், நான் பலம் இழந்துவருவதை உணர்ந்தேன்,'' என்றார் சதீஷ்.

இறுதி வாய்ப்பாக சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தமிழக அரசின் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சையை தேடி வந்தார் சதீஷ்.

துக்கமின்மையை போக்கிய சிகிச்சை



சதீஷ் உடல்நலத்தில் கடந்த இருபது நாட்களில் ஏற்பட்டுள்ள மாற்றம் பற்றி அவருக்கு சிகிச்சை அளித்த இயற்கை மருத்துவர் விகேன்ஷ்வரன் ,''சதீஷ்குமாரின் உடலில் ஜீரண உறுப்புகளைப் பலப்படுத்த மஞ்சள் நிற கண்ணாடி வழியாக சூரிய ஒளியை வயிற்றுப் பகுதியில் செலுத்தினோம். மஞ்சள் நிறம், கழிவுகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. அதோடு யோகா, உணவு முறையில் மாற்றம் போன்றவற்றை அவர் பின்பற்றியதால், தற்போது சதிஷ் குமாருக்கு மலம் கழிப்பதில் சிக்கல் குறைந்து, ரத்தம் வருவதும் வெகுவாக குறைந்துவிட்டது,'' என்றார்.

நிறசிகிச்சையின் போது உடல்நலமாகிவிடும் என்ற நம்பிக்கை வந்ததாக கூறும் சதீஷ்குமார். ''சூரிய வெளிச்சத்தில் வைக்கப்பட்ட நீல நிற கண்ணாடி பாட்டிலில் உள்ள தண்ணீரை பருகச்சொன்னர்கள்'' என்றார்.

''ஒரு துணியில் களிமண்ணை வைத்து அதனை ஈரப்பதமாக கண்கள், வயிற்றுப் பகுதியில் வைத்தார்கள். உடல் சூடு குறைந்து, நன்றாகத் தூங்கினேன், நல்ல தூக்கத்தால் மன அமைதியும் ஏற்பட்டது. உடல் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது,'' என்று மேலும் தெரிவித்தார் சதீஷ்குமார்.

எண்ணங்களை மேம்படுத்தும் வண்ணங்கள்

சதீஷ்குமாரைப் போன்ற பலர் மலச்சிக்கல், மன உளைச்சல் மற்றும் தூக்கமின்மையால் பலர் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு தொடக்க காலத்தில் அரசு யோகா இயற்கை மருத்துவமனையில் நிறசிகிச்சை தரப்படுகிறது என்கிறார் இயற்கை மருத்துவர் மற்றும் துணை பேராசிரியர் தீபா சரவணன்.

''இயற்கை மருத்துவத்தில் வெறும் உடலுக்கு மட்டுமே சிகிச்சை தரமுடியாது. உடல், உள்ளம், மூளை என அனைத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும். வண்ணங்களுக்கு நம் எண்ணங்களை மேன்மைப்படுத்தும் குணம் உள்ளது என்பதால் நிறச்சிகிச்சையை தருகிறோம். நிறசிகிச்சையை முதல் நிலையாகக் கொண்டு பின்னர் உணவு முறையை மாற்றுவது, யோகா பயிற்சிகள் போன்றவை அளிக்கப்படும் என்கிறார் மருத்துவர் தீபா.

ஒவ்வொரு நிறத்திற்கும் இருக்கும் குணங்கள் மற்றும் அவற்றை எவ்வாறு உணவில் எடுத்துக்கொள்வது என அவர் விளக்குகிறார்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...