மீண்டும் வருகிறது ரெட்மி 4

சமீபத்தில் அறிமுகமான ஜியோமி நிறுவனத்தின் ரெட்மி 4 மீண்டும் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது. 

சீனாவைச் சேர்ந்த ஜியோமி நிறுவனம், இந்தியாவில் தனது ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகிறது. கிட்டத்தட்ட ஆப்பிள் நிறுவனத்திற்குச் சவால் விடும் வகையில் பல்வேறு வசதிகளை கொண்ட இந்த வகை ஸ்மார்ட்போன்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பயங்கர வரவேற்பு உள்ளது. இந்த வகை போன்கள் இணையத்தில் விற்பனைக்கு வந்த சில தினங்களிலேயே விற்று தீர்ந்துவிடும். 

அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ரெட்மி 4 என்கிற புதிய ஸ்மார்ட்போனை ஜியோமி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த விற்பனை விரைவில் முடிந்துவிட்ட நிலையில், மீண்டும் ரெட்மி நோட் 4, இன்று 12 மணி முதல் பிளிப்கார்ட் (Flipkart), எம்.ஐ.காம் (Mi.com) உள்ளிட்ட இணைதள சந்தைகளில் விற்பனைக்கு வருகிறது.

மொத்தம் 3 விதமான ரகங்களில் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூபாய் 9,999, 10,999 மற்றும் 12,999 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த வகை ஸ்மார்ட்போன்கள் 4ஜி, டூயல் சிம், ஐ.ஆர்.சென்சார், Mi ரிமோட் ஆப், உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது. இரண்டு சிம் கார்டுகள் ஒரே நேரத்தில் பயன்படுத்தும் போது, முதல் சிம் 4G + / 4G / 3G / 2G அழைப்புகள் மற்றும் தரவரிசைகளை ஏற்கும். அதே நேரத்தில் இரண்டாவது சிம்மிற்கு 3G அழைப்புகளை மட்டுமே ஏற்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...