பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தையை கடத்த முயற்சி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பெண்னை பிடித்து போலீசார் விசாரணை

பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலாம்பட்டியை சேர்ந்தவர் சிவசாரதி எலக்ரிஷனாக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி கார்த்திகை ஜோதி இவர் பிரசவத்திற்காக சில தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை அவருக்கு பெண் குழந்தை பிறந்தது பச்சிளம் குழந்தைகள் பிரிவில் தாயும் சேயும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இன்று பிற்பகல் கார்த்திகை ஜோதிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் செவிலியர்கள் சிகிச்சை அளிக்க வேறு வார்டுக்கு அழைத்துச்சென்றனர் அவரது உறவினர்களும் குழந்தையை தனியாக விட்டு விட்டு அவருடன் சென்று விட்டனர்.



இந்த சந்தர்பத்தை பயன்படுத்திக்கொண்ட அடையாளம் தெரியாத பெண் அந்த குழந்தை எனது உறவினர்கள் குழந்தை என எடுத்துக்கொண்டு கடத்த முயன்றுள்ளார். அப்போது அக்கம்பக்கம் உள்ள மக்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்குள் குழந்தையின் உறவினர்கள் அங்கு வந்ததும் அந்த பெண் தப்பியோட முயன்ற போது அவரை பிடித்து வைத்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.



பின்னர் அங்கு வந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் அந்த பெண்னை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர் கடத்த முயன்ற பெண் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த செல்வி என்பது தெரிய வந்துள்ளது. குழந்தைகளை கடத்தி விற்பணை செய்யும் கும்பலுக்கும் இவருக்கும் தொடர்பு உள்ளதா இதற்கு இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அரசு மருத்துவமனையில் குழந்தையை கடத்த முயன்ற சம்பவம் கர்பிணி பெண்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...