சீராக குடிநீர் விநியோகிப்பது குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  வறட்சி பாதிப்பு மற்றும் குடிநீர் பிரச்சினைகள் தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்விற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் வேலுமணி, அனைத்து மாவட்டங்களிலும் வறட்சி தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு, தமிழகம் வறட்சி மாநிலம் என அறிவித்து பயிர்களுக்கு தகுந்தபடி நிவாரணம் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.



கோவை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர் கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். குடி நீர் பற்றாகுறை சூழலை பயன்படுத்தி  சிலர் போராட்ட சூழல்களை  ஏற்படுத்துவதாகவும், இதனை தவிர்த்து முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் 140 வருடங்களுக்கு பின்னர் கடும் வறட்சி நிலவும் நிலையில் பொதுமக்களும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

கோவை மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சினை அதிகரிக்கும் நிலையில், சிறுவாணி அணையில் தேங்கி இருக்கும் தண்ணீரை உறிஞ்சி எடுத்து  கோவை கொண்டு வருவது தொடர்பாக கேரள அதிகாரிகளுடம் தமிழக அதிகாரிகள்  கடந்த இரு தினங்களாக பேச்சுவார்த்தை  நடத்தி வருவதாகவும், விரைவில் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் வறட்சி தொடர்பாக அறிவிக்க மத்திய அரசு சில விதிமுறைகளை வைத்து இருப்பதாகவும் தெரிவித்த அமைச்சர், தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும், வறட்சி தொடர்பான அறிக்கை மத்திய அரசிடம் சமர்பிக்கப்பட்டு விட்டது எனவும் தெரிவித்த அமைச்சர் வேலுமணி  மத்திய அரசிடம் தேவையாக நிதியை  தமிழக அரசு கேட்டுப்பெறும் எனவும் மத்திய அரசும் மக்கள் பிரச்சினையை கருத்தில் கொண்டு உதவ முன்வரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாநகராட்சி, குடிநீர்வடிகால் வாரியம், வேளாண்மை துறை, வருவாய் துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...