361 டிகிரி மைன்ட்ஸ் கன்சல்டன்சி சர்வீசஸ் உடன் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் இணைந்து இணையதள மூலம் பாடத்திட்ட பயிற்சி துவக்கம்


கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்குனரகம் மற்றும் 361 டிகிரி மைன்ட்ஸ் கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகிய இருபெரும் நிறுவனங்களுக்கிடையே ஜனவரி 10ம் தேதியன்று (இன்று) ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

வேளாண் பல்லைக்கழக துணைவேந்தர் முனைவர் கு.இராமசாமி மற்றும் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்குனர் முனைவர் பெ.சாந்தி ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் இரா.அனந்தகுமார் மற்றும் 361 டிகிரி மைன்ட்ஸ் கன்சல்டன்சி சர்வீசஸ் தலைவர் சாய்சுமன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தப்படி பல்கலைக்கழக திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் பாடத்திட்டங்களான முதுநிலை வணிக மேலாண்மை, முதுநிலை பட்டயப் படிப்பான எரிசக்தி மேலாண்மை மற்றும் சான்றிதழ் பாடங்களான, வீடு மற்றும் மாடித்தோட்டம், மூலிகை மற்றும் வாசனைப் பயிர்கள் சாகுபடி மற்றும் மண்புழு உரம் தயாரிப்பு ஆகியவை இணையதளம் மூலமாக வழங்கப்படும்.

வீடு மற்றும் மாடித்தோட்ட விவசாயத்தில் பெருகி வரும் நகர்ப்புற வாசிகளின் ஆர்வத்தின் காரணமாகவும், இளைஞர்களின் கல்வித் தகுதியை அதிகரிக்கும் வகையிலும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமானது இப்புதிய முயற்சிக்கு வித்திட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களை இணையதள வழியாக செயல்படுத்துவதற்குரிய தொழில்நுட்பங்களை 361 டிகிரி மைண்ட்ஸ் வழங்க இருக்கிறது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...