சுகாதார வசதிகளை செய்து தராத மாநகராட்சியை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன்பாக மலம் கழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது


கோவை மாநகராட்சியின் 75-வது வார்ட்டிற்குட்பட்ட உப்பிலியான் திட்டு பகுதி மக்கள் காலைக்கடன்களை கழிக்க பொது சுகாதார மையம் அமைத்து தர வேண்டி பல்வேறு மனுக்களை அளித்து வந்துள்ளனர்.

பொது சுகாதார மையம் கட்ட 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட போதும் இதுவரை கழிப்பிடம் கட்டப்படாததால் அப்பகுதி மக்கள் அருகாமையில் உள்ள ரயில் தண்டவாளப் பகுதிகளை பயன்படுத்தும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். 

இந்நிலையில் தங்கள் பகுதியில் சுகாதார வசதிகளை செய்து தர வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஆதித்தமிழர் பேரவை தலைமையில் இன்று மாநகராட்சி அலுவலகம் முன்பாக மலம் கழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது பேசிய அவர்கள், உரிய சுகாதார வசதிகள் செய்யப்படாததால் ரயில்வே தண்டவாளங்களை காலை கடன்களை கழிக்க பயன்படுத்த வேண்டிய நிலை இருப்பதாகவும், இதனால் ரயில்வேத்துறையின் அபராத  தண்டனைகளை ஏற்க வேண்டிய நிலை இருப்பதாகவும் வேதனை தெரிவித்தனர். 

மேலும் தங்கள் பகுதிக்காக ஒதுக்கப்பட்ட 10 லட்சம் ரூபாய் என்னவானது என்பதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உடனடியாக பொது சுகாதார கழிப்பிடம் அமைத்துத் தர வேண்டும் எனவும் வலியுறித்தினர். 

இதையடுத்து மலம் கழிக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...