தியாகி திருப்பூர் குமரன் மார்க்கெட் பகுதியில் திருப்பூர் குமரன் சிலை அமைக்க வேண்டும் என கோரி ஆட்சியரிடம் மனு

கோவை பெரிய கடை வீதியில் உள்ள தியாகி திருப்பூர் குமரன் மார்க்கெட் பகுதியில் திருப்பூர் குமரன் சிலை அமைக்க வேண்டும் என ராஷ்ட்ரிய ஹிந்து பரிஷத் அமைப்பினர், திருப்பூர் குமரன் வேடம் அணிந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை பெரிய கடை வீதியில் டி.கே.மார்க்கெட் என அழைக்கப்படும் திருப்பூர் குமரன் மார்க்கெட் செயல்பட்டு வருகின்றது. சுதந்திரத்திற்காக போராடிய திருப்பூர் குமரன் பெயரில் அமைக்கப்பட்ட இந்த மார்க்கெட் பகுதியில் திருப்பூர் குமரன் சிலை அமைக்க வேண்டும் என நீண்டகாலமாக பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவரக்ள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராஷ்ட்ரிய ஹிந்து பரிஷத் அமைப்பினர் திருப்பூர் குமரன் வேடம் அணிந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

திருப்பூர் குமரன் பெயரில் மார்க்கெட் பெயர் வைக்கப்பட்டதை பலரும் மறந்து போன நிலையில், திருப்பூர் குமரனை நினைவுபடுத்தும் விதமாக மார்க்கெட் வளாகத்தில் அவரது சிலை அமைக்க வேண்டும் என அந்த அமைப்பினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...