தமிழகத்தின் வறட்சி நிலவரம் தொடர்பான அறிக்கையை தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுப்பவில்லை என பா.ஜ.க தேசிய செயலாளர் குற்றச்சாட்டு

தமிழகத்தின் வறட்சி நிலவரம் தொடர்பான அறிக்கையை தமிழக அரசு இதுவரை மத்திய அரசுக்கு அனுப்பவில்லை எனவும் உடனடியாக தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  பா.ஜ.க  தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த  பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதாவது:- மத்திய அரசின் பண மதிப்பிழப்பு அறிவிப்பு காரணமாக தங்கம், உணவு தானியங்கள் உள்ளிட்ட பொருட்களின் விலை குறைந்துள்ளதாகவும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் முழு பலன் தெரிய 6 மாதம் காலம் வரை ஆகும் எனவும் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு போட்டிகளை தடை செய்ய காரணமாக இருந்தது சோனியா காந்தி, கருணாநிதி, ஜெய்ராம் ரமேஷ் ஆகிய மூவர் மட்டுமே என குற்றம் சாட்டிய அவர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தக் கோரி உண்ணாவிரதம் மேற்கொள்வதென்றால் மு.க.ஸ்டாலின் கருணாநிதி வீட்டின் முன் மட்டுமே போராட்டம் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். 

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த மத்திய அரசு உறுதி கொண்டுள்ளதாகவும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்து ஜல்லிக்கட்டை நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். 

விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை தவிர்க்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்ட அவர், மத்திய அரசின் பயிர்க்காப்பீட்டு திட்டங்களை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

வரவிருக்கும் பட்ஜெட்டில் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் புதிய அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார். ப.சிதம்பரத்தின் பேச்சுக்கள் அவர் எப்படி நிதியமைச்சராக பணியாற்றினார் என்பதை கேள்விக்குறியாக்குவதாகவும் எச்.ராஜா குற்றம்சாட்டினார்.

Newsletter

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...