' தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடையை மீறி நடைபெற்றால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தரும்' மாநிலச் செயலாளர் முத்தரசன் உறுதி.


வறட்சி பாதுகாப்புகள் குறித்து ஆய்வு அறிக்கையை தமிழக அரசு விரைவாக தாக்கல் செய்து பேரிடர் நிதியை மத்திய அரசிடமிருந்து பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
 கோவை சின்னியம்பாளையம் தியாகிகளின் 71 ஆம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு இடதுசாரிகள் சார்பில் அவர்களது நினைவு இடத்தில் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பயன்பாடு பொதுமக்களுக்கும், முகவர்களுக்கும் தான் இழப்பு என்பதால், பெட்ரோல் முகவர்கள் அறிவிப்பு சரியானது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், கடந்த பல மாதங்களாக வறட்சி நிலவியதால் நம்பிக்கைக்குரிய பதில் அரசிடம் இருந்து வராததால் தான் விவசாயிகள் உயிரிழந்ததாக கூறிய அவர், விவசாயிகள் நோய்வாய், வயோதிகம் காரணமாக இறந்ததாக சில அமைச்சர்கள் கூறுவது கண்டனத்துக்குரியது என்றார்.

 விவசாயிகளை கொச்சைப்படுத்தும் செயல் என்றார். தமிழகத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஆண்டு முழுவதும் பணி வழங்க வேண்டும், தினமும் 400ரூபாய் கூலி, கடந்தாண்டு காப்பீட்டுத் தொகையையும், தனியாரிடம் இருந்து கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய பணத்தை பெற்று தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியவர் பிரதமரை முதல்வர் நேரில் சந்தித்தும் வர்தா புயலுக்கு முதற்கட்டமாக கேட்கப்பட்ட 1000 கோடி ரூபாயில் ஒரு பைசா கூட இதுவரை தராமல் தமிழக அரசுக்கு எப்போதும் உதவ தயார் என்று மத்திய அரசு கூறுவதை சுட்டிக்காட்டி சாடினார்.

 நீதிமன்றத்தை காரணம் காட்டி தமிழக பாஜக, பொன். ராதாகிருஷ்ணன் தவறான தகவலை கொடுத்து வருவதாக கூறிய அவர், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடையை மீறி நடைபெற்றால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தரும் என்று உறுதியளித்தார்.

Newsletter

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...