பயணிகள் ரயில் பெட்டியில் முழு சோதனையில் ஈடுபட்ட சேலம் தெற்கு ரயில்வே வர்த்தக பிரிவு அதிகாரிகள்


ரயில் பயணத்தில் பயணிகளின் சேவை மற்றும் மனநிறைவினை மேம்படுத்தும் நோக்கில் சேலம் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ரயிலில் ரயில்வே வர்த்தக பிரிவு அதிகாரிகளால் முழுமையான சோதனை நடைபெற்றது. 



இந்த ஆய்வின் மூலம், ரயில் பெட்டியில் பயணிகளுக்கான சேவைகள் சரியாக உள்ளதா, அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்கள், அங்கீகரிக்கப்படாத பயணிகள், பயணச் சீட்டு பெறாத பயணிகள், பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் உள்ளிட்டவை பரிசோதிக்கப்பட்டது.

சேலம் பிரிவு வர்த்தக மேலாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் விஜூ வின் தலமையில் நடைபெற்ற இந்த சோதனை, கோவை மற்றும் சேலம் இடையிலான ரயில் பெட்டியிலும், திருவனந்தபுரம் - இந்தூர் அகல்யா நகரி எக்ஸ்பிரஸ் (22646), ஹைதராபாத்- சபரி எக்ஸ்பிரஸ் திருவேந்ரம் (17229) ஆகிய ரயிலிலும் நடைபெற்றது.



இச்சோதனையின் போது 104 பேர் பயணச் சுட்டு இல்லாமல் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடம் இருந்து மொத்தம் 39 ஆயிரத்து 90 ரூபாய் அபராதம் வசூழிக்கப்பட்டது. 8 அங்கீகரிக்கப்படாத உணவு விற்பனையாளர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் ஆர்பிப்-யிடம் ஒப்படைக்கப்பட்டு பின் அவர்களிடம் இருந்து 3 ஆயிரத்து 800 ரூபாய் அபராதமாக வசூழிக்கப்பட்டது. மேலும், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக ஒரு திருநங்கை நபர் எச்சரிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, ரயில்வே அதிகாரிகள் பயணிகளிடம் ரயில் பயணம் குறித்து கேட்டறிந்தனர். அப்போது, அதிகாரிகளின் இந்த சோதனை மகிழ்ச்சியளிப்பதாக பயணிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...