வேலை வாய்ப்பு முகாமிற்கு குறித்த நிறுவனங்கள் வராததால் மாணவர்கள் முற்றுகை!


கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே தனியார் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டுவருகிறது.

இந்த கல்லூரியில், சிங்காநல்லூர் அருகே உள்ள 'ப்ரைட்ஸ் ஈவன்ட்ஸ்' என்ற தனியார் வேலைவாய்ப்பு அமைப்பினர்  ஒருங்கிணைத்த வேலைவாய்ப்பு முகாம் இன்று காலை தொடங்கியது. இந்த முகாமில் கலந்து கொள்ள கோவை ஈரோடு, திருப்பூர் மற்றும் சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.



பல முன்னனி நிறுவனங்கள் வரும் என்றும், வேலைவாய்ப்பு உருவாக்கித்தரப்படும் என்றும் ப்ரட் ஈவன்ட்ஸ் என்ற தனியார் அமைப்பின் சார்பில் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களிடம் இருந்து ரூ.300 வசூலித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வேலை வாய்ப்பு முகாமிற்கு 26 பெரிய நிறுவனங்கள்  வருதாக கூறப்பட்ட எந்த நிறுவனமும் வரவில்லை என்றும், தங்களிடம் இருந்து வசூலித்த பணத்தை திரும்ப தர வலியுறுத்தியும்  மாணவர்கள் திடீர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.



இதை தொடர்ந்து, சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...