ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரியில் "கணினி கருத்து பரிமாற்றம் மற்றும் தகவல் பரிமற்றதிற்கான" கருத்தரங்கு நிறைவுவிழா


கோவையில் உள்ள ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 2017ம் ஆண்டின் (ICCCI) கணினி கருத்து பரிமாற்றம் மற்றும் தகவல் பரிமற்றதிற்கான அகில உலக கருத்தரங்கு நிறைவுவிழா இன்று நடைபெற்றது. நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக ஸ்காவா சிஸ்டம்ஸ் துணைத் தலைவர் முரளி கிருஷ்ணன், தலைமை வடிவமைப்பாளர் குமார் மாதவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 



இந்நிகழ்ச்சியில், கணினி பொறியியல் துறைத்தலைவர் கண்ணம்மாள் வரவேற்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து கல்லூரியின் தாளாளர் தங்கவேலு தனது உரையில் மாணவர்கள் தங்கள் கல்லூரி பருவத்திலேயே ஒரு தொழிலதிபராகவும், ஆராய்ச்சியாளர்களாகவும் சிந்தித்து செயல்பட வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரைக் கூறினார். சிறப்பு விருந்தினர் குமார் மாதவன் பேசுகையில், மாணவர்கள் கல்லூரி பாடங்களை புரிந்து கற்க வேண்டும் மேலும் அவற்றை ஆராய்ச்சி நோக்கத்துடன் அனுக வேண்டும் என்று கூறினார். அவரைத் தொடர்ந்து முரளி கிருஷ்ணன் கூறுகையில், தொலைபேசி வர்த்தகம் இன்றைய காலகட்டத்தில் மிகவும் இன்றியமையாததாக விளங்குகிறது. மேலும் மாணவர்கள் வெற்றியாளர்களாக இருக்க வேண்டுமெனில் தொழில்நுட்பத்தில் தொலைநோக்கு பார்வை இருக்க வேண்டும் எனக் கூறினார். 



இறுதியில், இக்கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு விருதுகளும், சன்றிதழ்களும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. தகவல் தொடர்பியல் துறைத்தலைவர் பிரகாஷ் நன்றியுரைக் கூறினார். 



Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...