ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத் துவக்க விழா


ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும்  அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத் துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் இராதிகா வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதன்மைச் செயல் அதிகாரி சுந்தரராமன் நாட்டு நலப்பணித் திட்டத்தின் நோக்கம், மாணவர்கள் சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய செயல்பாடுகள் குறித்தும்;  மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தலைமை உரையாற்றினார்.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர் ஆளுமைப்பண்பு மற்றும் மத்திய அரசின்  சுகாதாரத் திட்டமான “சுவச் பாரத் அபியான்” என்பதன் கீழ் சுகாதார மேலாண்மை குறித்தும், நகரத்தை எவ்வாறு சுகாதாரமாக வைத்துக் கொள்வது? மக்கும் குப்பை, மக்காத குப்பையை எவ்வாறு தரம் பிரிப்பது? என்று மாணவர்களுக்கு எடுத்துரைத்து சிறப்புரை ஆற்றினார்.

கோவை மாவட்ட இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் அழகர்சாமி  பேரிடர் மேலாண்மை, இரத்த தான முகாம் குறித்துச் சிறப்புரை ஆற்றினார். நடப்பாண்டு நாட்டுநலப்பணித்திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கச் செயல்பாடுகள் குறித்து கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் பாலாஜி உரையாற்றினார். இளைஞர் செஞ்சிலுவைச் சங்கக் திட்ட அலுவலர் குமரேசன் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...