வால்பாறையில் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம்


வால்பாறையில் பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக நள்ளிரவில் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடுகளையும், பள்ளி சத்துணவுக்கூடம், நியாயவிலைக் கடைகள் மற்றும் டீக்கடை, மளிகைக் கடை ஆகியவற்றை சேதப்படுத்தி வருகிறது.

 

வால்பாறையை அடுத்துள்ள பழைய வால்பாறை எஸ்டேட் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் நுழைந்து அங்கிருந்த வீடுகளின் கதவுகளை உடைத்து பாத்திரங்கள் மற்றும் பொருட்களை சேதப்படுத்தியது. இன்று அதிகாலை ஸ்டேன்மோர் எஸ்டேட்டில் உள்ள சிந்தாமணி ரேஷன் கடையை உடைத்து 1 மூட்டை அரிசி மற்றும் பொருட்களை நாசம் செய்தது. சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டு யானைகளை காட்டுப்பகுதிக்குள் விரட்டினர்.



 

இதே போல் வால்பாறை அருகே உள்ள உருளிக்கல், தாய்முடி, ஈட்டியார், புதுத்தோட்டம் ஆகிய பகுதிகளில் யானைகள் தொடர்ந்து முகாமிட்டுள்ளது. பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். வனவிலங்குகளிடமிருந்து பொதுமக்களை பாதுகாக்க அரசு மின்வேலிகள் அமைத்தும் அகழிகளை வெட்டியும் பாதுகாப்பு வழங்க வேண்டுமென்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...