ஏடிஎம்மில் மோசடியில் ஈடுபட்டவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு மாறாக கணக்கு காட்டிய பெண் காவல் ஆய்வாளர் தற்காலிக பணி நீக்கம்


பொள்ளாச்சியை சேர்ந்த செந்தில்குமார் என்ற வாலிபர் கடந்த அக்டோபர் மாதம் கோவை காந்திபுரம் பகுதியிலுள்ள ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக வந்த வேளாண் கல்லூரி பேராசிரியர் ஒருவரிடம் பணம் எடுத்து தருவதாகக் கூறி அவரது ஏடிஎம் அட்டையை மோசடி செய்து பறித்துள்ளார்.

மேலும், அவருக்கு போலி அட்டையை கொடுத்தனுப்பிய அந்த வாலிபர் பேராசிரியரின் கணக்கிலிருந்து 35 ஆயிரம் ரூபாயை எடுத்துள்ளார். 

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட கோவை காட்டூர் காவல்நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் பிரியா மாலினி, செந்தில்குமாரை கைது செய்தார். தொடர்ந்து, அவரது வீட்டில் சோதனை செய்து சுமார் ஒரு லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளார். 

ஆனால், காவல்துறை பதிவேட்டில் குறைந்த மதிப்பிலான தொகை மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டதாக கணக்கு காட்டி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட வாலிபர் செந்தில்குமாரின் உறவினர் அளித்த தகவலின் பேரில் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் நடத்திய விசாரணையில் பெண் காவல் ஆய்வாளர் பிரியா மாலினி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், அவர் மீதான குற்றச்சாட்டுக்கு உரிய விளக்கமளிக்க வலியுறுத்தியுள்ளதாகவும், குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...