கோவை தனியார் கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்

கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சேலை உடை அணிந்து கல்லூரி மாணவர்கள் பொங்கல் வைத்து குலவையிட்டு, குத்தாட்டத்துடன் உற்சாகமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

கோவை, பீளமேடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மேலாண்மை கல்லூரி சார்பில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தமிழ் பாரம்பரிய முறைப்படி மேலாண்மை கல்லூரி மாணவர்களும், மாணவிகளும் வேட்டி, சேலை அணிந்து பொங்கல் விழாவை கொண்டாடினர். 

கல்லூரி வளாகத்தில் அடுப்பு மூட்டி சர்க்கரை பொங்கல் வைத்த மாணவ, மாணவிகள் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை வரவேற்றனர். கல்லூரி வளாகத்தில் நடந்த இந்த பொங்கல் விழாவை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் கிராமங்களில் உள்ளதை போன்று கரும்பு ஜூஸ், பஞ்சுமிட்டாய், பதநீர், நொங்கு போன்ற பாரம்பரிய உணவு வகைகள் மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டது.

மேலும் இவ்விழாவில், மாணவ, மாணவிகள ஜமாப் வாத்திய இசைக்கு ஏற்ப ஆட்டம், பாட்டத்துடன் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர். அனைத்து தரப்பு மாணவ, மாணவிகளும் ஒன்றாக படிப்பை மட்டுமே மையமாகக் கொண்டு கலாச்சாரத்தினை மறந்து வரும் நிலையில் தமிழக கலாச்சாரம் அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் தெரிவதற்காக தமிழ் முறைப்படி பொங்கல் கொண்டாடுவதாக அக்கல்லூரி மாணவ, மாணவியர்கள் தெரிவித்தனர். 

பொங்கல் விழாவை முன்னிட்டு கோலப்போட்டி, கரும்பு கடிக்கும் போட்டி, மண்பாணையில் ஓவியம் வரையும் போட்டி என பல்வேறு போட்டிகள் மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்டது.

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் இக்கல்லூரியில் படித்து வருவதால் பொங்கல் பண்டிகைக்காக தொடர் விடுமுறையும் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...