உதவி பேராசிரியை கழுத்து அறுக்கப்பட்டு, தீ வைத்து எரித்து கொலை- காவல் துறை தீவிர விசாரணை


கோவை அருகே இருகூரில் உதவி பேராசிரியை லதா, அவரது  வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வந்தவர் லதா. இவரது கணவர் சிவலிங்கத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோவை இருகூர் ஐ.ஓ.பி காலனி பகுதியில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், இன்று காலை லதாவின் பக்கத்து வீட்டை சேர்ந்த ராணி என்பவர் லதாவின் வீட்டிற்கு சென்ற போது உடல் முழுவதும் எரிந்த நிலையில் லதா இறந்து கிடந்துள்ளார். மேலும் கழுத்து அறுக்கப்பட்டதற்கான தடயங்களும் இருந்துள்ளது.

இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக சிங்காநல்லூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், சம்பவம் நடந்த இடத்தின் அருகே சாம்பார் பொடி தூவப்பட்டு இருந்ததும், உதவி பேராசிரியரை லதா நிர்வாண நிலையில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், அவரை கற்பழித்து கொலை செய்து பின் எரித்திருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகின்றனர். 

மேலும், இறந்த பேராசிரியையின் வீட்டில் இருந்து பொருட்கள் எதுவும் திருடப்பட்டு இருக்கின்றதா என்பது குறித்தும், வீட்டிற்கு யார் வந்து சென்றுள்ளார்கள் என்பது குறித்தும் சிங்காநல்லூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...