கோவை சட்டமன்ற தொகுதிகளுக்கான திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் முன்னிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் இன்று வெளியிட்டார். 



இந்த பட்டியலின் படி கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை தெற்கு, தொண்டாமுத்தூர், கோவை வடக்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை என பத்து தொகுதிகளில் 28 லட்சத்து 35 ஆயிரத்து 102 வாக்காளர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 14 லட்சத்து 06 ஆயிரத்து 824 பேரும், பெண் வாக்காளர்கள் 14 லட்சத்து 28 ஆயிரத்து 2 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 276 பேரும் உள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து வீடு மாறியவர்கள், உயிரிழந்தவர்கள், பல முறை பதிவு செய்தவர்கள் என 91 ஆயிரத்து 54 பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளுக்கு வாக்காளர் பட்டியலின் நகல் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...