தமிழகத்தில் குளிர் மேலும் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

'வடகிழக்கு பருவ மழை முடிவுக்கு வந்ததால், வரும் நாட்களில், குளிர் மேலும் அதிகரிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குளிர் தீவிரமாகும்:

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது: வடகிழக்கு பருவ மழை நேற்று முடிந்த நிலையில், வட கிழக்கில் இருந்து வீசும் கடல் காற்று முடிவுக்கு வந்துள்ளது. இனி வடகிழக்கில் இருந்து, தரைக்காற்று மட்டுமே வீசும்; அடுத்து குளிர்காலம் தீவிரமாகும். இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் நாட்களில், 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் குறைந்து, குளிர் அதிகரிக்கும்; இயல்பான வெப்ப நிலை, 22 டிகிரியாக இருக்கும்.

வலுப்பெற வாய்ப்பு:

தற்போது, அந்தமான் மற்றும் சுமத்ராவுக்கு இடையே, வங்கக் கடலில், காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமாகி வருகிறது. இது, 24 மணி நேரத்தில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...